• Mon. May 25th, 2026
WhatsAppImage2026-05-22at0509101
previous arrow
next arrow
Read Now

ஸ்ரீபத்ரகாளியம்மன் ஆலயத்தில் திருவிளக்கு பூஜை..,

ByM.I.MOHAMMED FAROOK

Feb 6, 2026

புதுச்சேரி மாநிலம் காரைக்கால் அடுத்த அம்பகரத்தூரில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு பத்ரகாளியம்மன் ஆலயத்தில் ஆண்டு தோறும் தை மாதம் கடைசி வெள்ளிக்கிழமையன்று மஹாலட்சுமி பூஜை எனும் திருவிளக்கு பூஜை நடைபெறுவது வழக்கம்.

இந்த ஆண்டு தை கடைசி வெள்ளியான இன்று நடைபெற்ற 1008 திருவிளக்கு பூஜையில் காரைக்கால் மாவட்டத்தின் பல்வேறு பகுதியிலிருந்து 1000ற்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குத்துவிளக்கை அம்மனாக பாவித்து சிறப்பு பூஜை, அர்ச்சனை செய்து அருள்மிகு பத்ரகாளியம்மனை வழிபட்டனர். 1008 விளக்கு பூஜை முன்னிட்டு ஸ்ரீபத்ரகாளியம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது.

விழாவை முன்னிட்டு ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். விழாவில் ஆலய அறங்காவலர் குழு நிர்வாகிகள் உள்ளிட்ட ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்ரீபத்ரகாளியம்மனை தரிசித்து அருள்பெற்றனர்.