இந்த ஆண்டு அண்ணா பல்கலைக்கழகத்தில் பொறியியல் படிப்பில் காலியிடங்கள் இருக்காது என உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி விளக்கம் அளித்துள்ளார். இதுபற்றி பேசிய அவர் “பொறியியல் படிப்பில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை இந்த ஆண்டு அதிகரித்துள்ளது. இன்னும் 1.10 லட்சம் பேருக்கு அக்.13ம் தேதி கலந்தாய்வு நடைபெற உள்ளது. பொறியியல் படிப்பில் இந்த ஆண்டு ஐடி எலக்ரானிக்ஸ் , கணிணி அறிவியியல் பிரிவில் சேர மாணவர்கள் அதிக ஆர்வம் காட்டியுள்ளனர் என்றார்.