தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று (மார்ச் 2) காலையில், கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 33 வார்டுகளில், தி.மு.க., -19, அ.தி.மு.க.,-7, அ.ம.மு.க.,-2, காங்., – 2, பா.ஜ., – 1, மற்றும் சுயே., – 2 என வாகை சூடின. களம் கண்ட 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மட்டுமே ‘வின்னிங்’ ஆனது. தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டதால் நீயா? நானா? போட்டி தி.மு.க.,- காங்., இடையே ஏற்பட்டது. இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் விரக்தியடைந்தனர். அவர்களை ‘கூல் டவுண்’ படுத்த நேற்று மூணாறு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் தேனி நகருக்குள் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, கட்சி மேலிடத்தில் இருந்து தகவல் வெளியானது. இதனால் தி.மு.க., வினரின் தலைவர் பதவி வெறும் கனவாகிப் போனது.
யார்? இந்த சற்குணம்….. அவரின் பின்னணி என்ன? என்று விசாரித்த போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
22வது வார்டில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேனி நகரின் பாரம்பரிய மிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.தியாகராஜன் என்பவரின் மருமகள். சற்குணத்தின் கணவர் ராஜ்குமார். இவர் ஒரு டாக்டர். இவர்களது மகன் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆவார். இவர்கள் அனைவரும் தேனி நகர மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர். எல்லோரிடமும் அன்பாக பழக்கூடியவர்கள். இதன் காரணமாக 22வது வார்டு மக்களிடமிருந்து எளிதாக வெற்றிக் கனியை பெறமுடிந்தது. எது எப்படியோ பலரும் பலவாறு புகழ்ந்தாலும், தனது வார்டு மக்களின் குறைகளை அவர் நிவர்த்தி செய்தாலே போதும்…என்ற மனப்பான்மையில் வார்டு மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
- மாரிசெல்வராஜ் அரசியல் ஜெயிக்க வேண்டும் – கமல்ஹாசன்மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின், வடிவேலு, கீர்த்தி சுரேஷ், பகத் பாசில் உட்பட பலர் […]
- மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமனம்மதுரை மதுரை மீனாட்சி அம்மன் கோவிலுக்கு மீண்டும் இணை கமிஷனர் நியமிக்கப்பட்டார். மீனாட்சி அம்மன் கோவில் […]
- துரிதம்… தேடலா!!! தேர்ச்சியா !!! திரைவிமர்சனம்சினிமா என்ற ஒரே கோட்டில் நின்று தான் எல்லோரும் குறி பார்த்து வெற்றியை நோக்கி சுடுகிறார்கள் […]
- வீரன் திரைவிமர்சனம்’மரகத நாணயம்’ என்ற ஒரு ஃபேண்டஸி கதைக்களத்தை படமாக்கி அதில் வெற்றியும் பெற்ற ஏ.ஆர்.கே.சரவனின் அடுத்த […]
- ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் கண்டறியப்பட்டுள்ளது- ரெயில்வே அமைச்சர் தகவல்நாட்டையே உலுக்கிய ஒடிசா ரயில் விபத்துக்கான காரணம் க ண்டறிப்பட்டுள்ளதாக ரயில்வே அமைச்சர் தெரிவித்துள்ளார்.சென்னை நோக்கி […]
- மாமன்னனில் வடிவேலு கரை சேருவாரா?மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகி வெற்றிபெற்ற பரியேறும் பெருமாள்,கர்ணன்இரண்டு படங்களிலும் காமடி நடிகர் யோகிபாபு நடித்திருக்கிறார்இருந்தபோதிலும் […]
- காதர்பாட்சா@முத்துராமலிங்கம் திரைவிமர்சனம்புரியுதானு பாருங்க!ஒரு கோழிக்குச் சிக்கல்னாலே கொத்துப்புரோட்டா போடும் ஆர்யா கொழுந்தியாவுக்கு சிக்கல்னா சும்மா வுடுவாரா? அதோட […]
- மதுரை விமானநிலையம் கூகுள் மேபில் முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என உள்ளதால் சர்ச்சைமதுரை விமான நிலையத்திற்கு முத்தரையர் பன்னாட்டு விமான நிலையம் என கூகுள் மேப்பில் பெயர் பதிவாகியுள்ளதால் […]
- காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் தர்ணா போராட்டம் – விஜய் வசந்த் எம் பி பங்கேற்புமத்திய அரசின் மக்கள் விரோத செயல்களை கண்டித்து காங்கிரஸ் ஓ பி சி பிரிவு சார்பில் […]
- மதுரை மாநகரில் அசுர வேகத்தில் பறக்கும் இருசக்கர வாகனங்கள்மதுரை மாநகரில் பல்வேறு இடங்களில் அசுர வேகத்தில் ஆபத்தான முறையில் இருசக்கர வாகனத்தில் சாகசம் பொதுமக்கள் […]
- மதுரையில் அண்ணல் அம்பேத்கர் தொழில் முன்னோடிகள் திட்ட விழிப்புணர்வுக் கருத்தரங்குதமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் தொழில்முனைவோருக்கென செயல்படுத்தும் தனிச் சிறப்புத் திட்டமான அண்ணல் அம்பேத்கர் […]
- சோழவந்தான் பேரூர் திமுக சார்பாக கருணாநிதி பிறந்தநாள் விழாசோழவந்தான் பேரூர் திமுக சார்பாக தமிழ்நாடு முன்னாள் முதல்வர் கருணாநிதி பிறந்தநாள் விழா இனிப்பு வழங்கி […]
- மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம்மதுரை கூடலழகர் பெருமாள் கோயில் வைகாசிப் பெருந்திருவிழா திருத்தேரோட்டம் கோலாகலம்.ஆயிரகணக்கான பக்தர்கள் சுவாமி தரிசனம்.மதுரை அருள்மிகு […]
- ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு …வீணாகும் தண்ணீர்ராஜபாளையத்தில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சுமார் 15 அடி உயரத்திற்கு பீய்ச்சு அடித்து வீணாகி […]
- இன்றுபுரத மடிப்பு குறித்த ஆய்வாளர் தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம்புரத மடிப்பு குறித்த முன்னோடி ஆய்வுக்காக மிகவும் பெயர்பெற்ற தர்சன் அரங்கநாதன் பிறந்த தினம் இன்று […]