தேனி அல்லிநகரம் நகராட்சி தலைவர் பதவி காங்கிரஸ் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுளதால், தி.மு.க., கவுன்சிலர்கள் மற்றும் தொண்டர்கள் விரக்தியடைந்து காணப்படுகின்றனர்.
நடந்து முடிந்த நகர்புற உள்ளாட்சி தேர்தலில், தேனி அல்லிநகரம் நகராட்சிக்குட்பட்ட 33 வார்டுகளில் போட்டியிட்டு, வெற்றி பெற்ற 33 பேரும் நேற்று (மார்ச் 2) காலையில், கவுன்சிலராக பதவி ஏற்றுக் கொண்டனர். இவர்களுக்கு நகராட்சி ஆணையாளர் வீரமுத்துக்குமார் பதவி பிரமாணம் செய்து வைத்தார். 33 வார்டுகளில், தி.மு.க., -19, அ.தி.மு.க.,-7, அ.ம.மு.க.,-2, காங்., – 2, பா.ஜ., – 1, மற்றும் சுயே., – 2 என வாகை சூடின. களம் கண்ட 5 தம்பதிகளில் ஒரு தம்பதி மட்டுமே ‘வின்னிங்’ ஆனது. தலைவர் பதவி பெண்ணிற்கு ஒதுக்கப்பட்டதால் நீயா? நானா? போட்டி தி.மு.க.,- காங்., இடையே ஏற்பட்டது. இதனால் தி.மு.க., கவுன்சிலர்கள் விரக்தியடைந்தனர். அவர்களை ‘கூல் டவுண்’ படுத்த நேற்று மூணாறு அழைத்துச் செல்லப்பட்டனர். ஒரு சில தி.மு.க., கவுன்சிலர்கள் மட்டும் தேனி நகருக்குள் சுற்றித் திரிந்ததை காண முடிந்தது. இந்நிலையில் நகராட்சி தலைவர் பதவி காங்கிரசுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என, கட்சி மேலிடத்தில் இருந்து தகவல் வெளியானது. இதனால் தி.மு.க., வினரின் தலைவர் பதவி வெறும் கனவாகிப் போனது.
யார்? இந்த சற்குணம்….. அவரின் பின்னணி என்ன? என்று விசாரித்த போது பல சுவாரஸ்யமான தகவல்கள் கிடைத்தன.
22வது வார்டில் காங்., சார்பில் போட்டியிட்டு வெற்றி பெற்றவர். தேனி நகரின் பாரம்பரிய மிக்க முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் என்.ஆர்.தியாகராஜன் என்பவரின் மருமகள். சற்குணத்தின் கணவர் ராஜ்குமார். இவர் ஒரு டாக்டர். இவர்களது மகன் என்.ஆர்.டி.ஆர்.தியாகராஜன் ஆவார். இவர்கள் அனைவரும் தேனி நகர மக்களுக்கு மிகவும் பரிட்சியமானவர். எல்லோரிடமும் அன்பாக பழக்கூடியவர்கள். இதன் காரணமாக 22வது வார்டு மக்களிடமிருந்து எளிதாக வெற்றிக் கனியை பெறமுடிந்தது. எது எப்படியோ பலரும் பலவாறு புகழ்ந்தாலும், தனது வார்டு மக்களின் குறைகளை அவர் நிவர்த்தி செய்தாலே போதும்…என்ற மனப்பான்மையில் வார்டு மக்கள் நம்பிக்கையில் உள்ளனர்.
- போக்சோ தண்டனையில் விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைதுஜெயங்கொண்டம் அருகே போக்சோ சட்டத்தில் ஆயுள் தண்டனை பெற்று விடுதலையானவர் மீண்டும் போக்சோ சட்டத்தில் கைது […]
- கழுத்து கருமை நீங்க:சிறிதளவு ரோஸ்வாட்டர், சிறிதளவு வெங்காயச் சாறு, இரண்டு சொட்டு ஆலிவ் ஆயில் மற்றும் பயத்தமாவு கலந்து […]
- டென்மார்க்கில் 25 வயதிற்குள் திருமணம் ஆகவில்லையென்றால் இதுதான் சம்பிரதாயமாம்…இந்த உலகில் உள்ள ஒவ்வொரு நாட்டிலும் வெவ்வேறு பழக்க வழக்கங்கள் மற்றும் கலாச்சாரங்கள் பின்பற்றப்பட்டு வருகின்றன. […]
- முளைகட்டிய கோதுமை இனிப்புப் புட்டு:தேவையானவை:கோதுமை – ஒரு கப் நாட்டுச் சர்க்கரை – தேவையான அளவு நெய் – சிறிதளவு […]
- கலைஞர் கருணாநிதி திரு உருவ சிலை திறக்கப்படும் நாள் அனைவருக்கும் தித்திப்பான நாள்… ஸ்டாலின் நெகிழ்ச்சிசென்னை ஓமந்தூரார் தோட்ட அலுவலகத்தில் நாளை மாலை 5.30 மணிக்கு நடைபெறும் விழாவில் கருணாநிதி சிலையை […]
- தமிழ் மொழி நிலையானது. தமிழ் கலாச்சாரம் உலகளாவியது- மோடி பெருமிதம்பொங்கல், புத்தாண்டு காலங்கள் மிகுந்த ஆர்வம் நிறைந்தவை தமிழ் மொழி நிலையானது,அதன் கலாச்சாரம் உலகளாவியது என […]
- ரூ.31500 கோடியில் திட்டங்கள்- பிரதமர் துவக்கி வைத்தார்தமிழகத்தில் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டவும், நிறைவுற்ற பணிகளை தொடங்கி வைத்து நாட்டுக்கு அர்ப்பணிக்கவும் பிரதமர் […]
- இதுதான் திராவிட மாடல் -மோடியின் முன்பு ஸ்டாலின் பேச்சுபல்வேறு திட்டங்களை துவக்கிவைக்க பிரதமர் மோடி தமிழக வந்துள்ளார்.இந்நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின் திராவிடமாடல் குறித்த […]
- சிந்தனைத் துளிகள்• வேத புத்தகங்களைப் படித்தால் மட்டும் போதாது.அதன்படி ஒட்டி ஒழுகுவதன் மூலமேவேதாந்தம் காட்டும் பாதையை அடையலாம். […]
- பொது அறிவு வினா விடைகள்1.குரோனா நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?சுவீடன்2.உலக மக்கள் தொகை தினம் என்று கொண்டாடப்படுகிறது?ஜூலை 113.உலக […]
- குறள் 215:ஊருணி நீர்நிறைந் தற்றே உலகவாம்பேரறி வாளன் திரு.பொருள் (மு.வ):ஒப்புரவினால் உலகம் வாழுமாறு விரும்பும் பேரறிவாளியின் செல்வம், […]
- தனி விமானம் மூலம் சென்னை வந்தடைந்தார் பிரதமர் மோடி…ஹைதராபாத்திலிருந்து தனி விமானம் மூலமாக பிரதமர் நரேந்திர மோடி சென்னை வந்தடைந்தார். அவரை அமைச்சர் துரைமுருகன், […]
- வேளாண்மை கூட்டுறவு சங்கத்தில் ரூ.35.000 சம்பளத்தில் 26 காலிப்பணியிடங்கள் ..தென்னிந்திய பல மாநில விவசாய கூட்டுறவு சங்கம் (SIMCO) வேலைவாய்ப்பு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதில் […]
- சென்னைக்கு ஒரு நாள் பயணம்… நேரு உள் விளையாட்டு அரங்கில் நடைபெறும் நிகழ்ச்சியில் பிரதமர் பங்கேற்பு…பிரதமர் மோடி இன்று ஒரு நாள் பயணமாக சென்னை வருகிறார். சென்னையில் உள்ள நேரு உள் […]
- ஸ்மார்ட்போன் டேட்டா பயன்பாட்டில் இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம்உலகின் அளவில் ஸ்மார்ட் போன் டேட்டா பயன்பாட்டில்இந்தியா முதலிடத்தில் உள்ளது- பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்தார்.ஐதராபாத்தில் […]