கோயம்பேடு காய்கறிச் சந்தையில் கந்துவட்டி கொடுப்பவரிடம் அடியாள் வேலை செய்கிறார் பிரபுதேவா. அநாதையான அவருடைய வாழ்வில் திடீரென நான் தான் உன் அம்மா எனச் சொல்லிக் கொண்டு ஈஸ்வரிராவ் வருகிறார்.இவ்வளவு வருடங்களாக அவர் எங்கிருந்தார்? அவர் வந்த பின் என்னவெல்லாம் நடக்கிறது? என்பதுதான் படம்.
பிரபுதேவாவுக்கு முற்றிலும் மாறுபட்ட வேடம். எந்நேரமும் முரட்டுத்தனமான முகத்துடன் விறைப்பாகவே திரிகிறார். ஈவு இரக்கமின்றி அவர் ஆட்களை அடிக்கும்போது நமக்கே பயமாக இருக்கிறது. வசனங்கள் அதிகம் இல்லாமல் இருப்பது அந்த வேடத்துக்குப் பலம் சேர்க்கிறது. தான் தோன்றித்தனமாக இருக்கும் அவர் வாழ்வில் அன்பு பாசம் ஆகியனவற்றிற்கு இடம் கிடைத்ததும் நடக்கும் மாற்றங்களையும் நடிப்பில் நன்றாகவெளிப்படுத்தியுள்ளார்.
அம்மாவாகநடித்திருக்கும் ஈஸ்வரிராவ் படத்துக்குப் பலம். அவர் யாரெனத் தெரியவரும்போது ஆச்சரியம் கலந்த அதிர்ச்சி. நன்றாக நடித்து வியக்கவைக்கிறார்.
நாயகியாக வரும் சம்யுக்தாஹெக்டே வுக்கு வித்தியாசமான வேடம். இளம்பெண்கள் செய்யத் துணியாத காரியத்தை அசால்ட்டாகச் செய்கிறார். பிரபுதேவா சும்மா இருக்கும்போது அவர்முன் ஆட்டம் போடுகிறார்.
யோகிபாபு அங்கங்கே சிரிக்க வைக்கிறார். சத்ரு, பரணி, மாரிமுத்து உள்ளிட்ட நடிகர்கள் அவரவர் பங்கைச் செய்துள்ளனர்.விக்னேஷ்வாசு ஒளிப்பதிவில் கோயம்பேடு சந்தை மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் புதிதாகத் தெரிகின்றன.
சி.சத்யாவின் இடையில் பாடல்கள் நன்று, பின்னணி இசையில் உணர்ச்சிகரமான காட்சிகளுக்கு மேலும் உரமேற்றியிருக்கிறார். எழுதி இயக்கியிருக்கிறார் ஹரிகுமார்.கோயம்பேடு சந்தையில் காய்கறிகள் மட்டுமின்றி பண வியாபாரமும் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தியதோடு அதனால் ஏற்படும் விளைவுகளையும் உள்ளம் அதிரச் சொல்லியிருக்கிறார்.
தயாரிப்பு : ஸ்டுடியோ கீரீன் இயக்கம்: ஹரிகுமார் நடிப்பு: பிரபுதேவா, சம்யுக்தா ஹெக்டே
- சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிபங்குனி மாத பிரதோஷம் மற்றும் பவுர்ணமி முன்னிட்டு சதுரகிரிக்கு பக்தர்கள் செல்ல 4 நாட்கள் அனுமதிவழங்கி […]
- தமிழகத்தில் பிரிக்கப்படும் மாவட்டங்களின் பட்டியல்தமிழகத்தில் புதிதாக 8 மாவட்டங்கள் உருவாக்கப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்தமிழகத்தில் மேலும் 8 […]
- இன்று தமிழ்நாடு முழுவதும் சுங்க கட்டணம் உயர்வு..!ஏப்ரல் முதல் நாளான இன்று முதல் தமிழ்நாடு முழுவதும் 29 சுங்கச்சாவடிகளில் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.தமிழ்நாட்டில் உள்ள […]
- உதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் அலங்கார உபாய திருவீதி உலாஉதகை ஸ்ரீராஜராஜேஸ்வரி கோயிலில் பனிரெண்டாம் நாள் ஸ்ரீராஜராஜேஸ்வரி அம்மன் அலங்காரத்தில் திருவீதி உலா நடைபெற்றது.உதகை தாசபளஞ்சிக […]
- அதிரடியாக குறைந்த சிலிண்டர் விலை!!இன்று வணிக பயன்பாட்டிற்கான கேஸ் சிலிண்டர் விலை அதிரடியாக விலை குறைந்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா […]
- மதுரை காமராஜர் பல்கலை . பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை காமராஜர் பல்கலைகழகத்தில் மாணவிகளிடம் தரக்குறைவாக பேசிய வரலாற்றுத் துறை பேராசிரியர் வன்கொடுமை சட்டத்தில் கைதுமதுரை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 150: நகை நன்கு உடையன் பாண நும் பெருமகன்மிளை வலி சிதையக் களிறு […]
- ஆருத்ரா கோல்டு நிறுவன மோசடி பாஜக நடிகர் ஆர்.கே.சுரேஷ் வெளிநாடு தப்பி ஓட்டம்ஆருத்ரா கோல்டு நிறுவனம் ரூ.2438 கோடி மோசடி செய்த வழக்கில் திடீர் திருப்பமாக நடிகரும், பாஜக […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் நிபந்தனையற்ற அன்பு! ஏழை சிறுவன், பசியால் ஒரு வீட்டின் கதவைத் தட்டினான்.கதவைத் திறந்த இளம்பெண், […]
- பொது அறிவு வினா விடைகள்
- இன்று முட்டாள் தினம் -ஒருவரை அறிவாளி /முட்டாள் என தீர்மானிப்பது யார் ?உலகம் முழுதும் “April Fools Days” என்று இன்றளவும் மக்கள் ஒருவரையொருவர் முட்டாளாக்கி கொண்டு மகிழ்ச்சியோடு […]
- குறள் 415இழுக்கல் உடையுழி ஊற்றுக்கோல் அற்றேஒழுக்க முடையார்வாய்ச் சொல்.பொருள் (மு.வ):கல்லாதவன் ஒழுக்கமுடைய சான்றோரின் வாய்ச் சொற்கள், வழுக்கல் […]
- சோழவந்தான் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க வேண்டும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கைபணிகள் நிறைவு பெற்ற நிலையில் மதுரை மாவட்டம் சோழவந்தானில் ரயில்வே மேம்பாலத்தை உடனடியாக திறக்க சமூக […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் அன்ன வாகனத்தில் முருகன், தெய்வானை எழுந்தருளி அருள்பாலித்தார்..!திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் பங்குனி மூன்றாவது நாள் திருவிழாவில் அன்ன வாகனத்தில் முருகன் தெய்வானை […]
- எல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள்-நடிகர் சூரி பேட்டிஎல்லோரும் சமம் என்பதை தெரியபடுத்துவது தான் தியேட்டர்கள், ரோகினி திரையரங்க சம்பவம் வருத்தமளிக்கிறது, எந்த சூழலில் […]