பல்லடம் அருகே பால சமுத்திரம், பெரும்பாளி ஆகிய இரு வேறு இடங்களில் அடுத்தடுத்து மூன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை போன வழக்கு!ஒடிசா மாநிலத்தை சேர்ந்தவர் உட்பட ஐந்து பேர் கைது!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே பாலசமுத்திரம் பகுதியில் வசித்து வரும் கணேஷ் மற்றும் சசிகுமார் ஆகியோரது பூட்டிய வீடுகளின் பூட்டை உடைத்து உள்ளே புகுந்த மர்ம கும்பல் ஒன்று கடந்த சில நாட்களுக்கு முன் இரண்டு வீட்டு பீரோக்களிலும் வைக்கப்பட்டிருந்த தங்க நகைகள் மற்றும் பணத்தை கொள்ளை அடித்து தப்பியது. அதே போல் பெரும்பாளி பகுதியிலும் ஓய்வு பெற்ற விமான படை அதிகாரி வீட்டிலும் புகுந்த கும்பல் அங்கிருந்து ரொக்கப் பணத்தை கொள்ளை அடித்து சென்று விட்டதாக கூறப்படுகிறது.இச்சம்பவம் குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து கொள்ளையர்களை வலைவீசி தேடி வந்தனர்.
இந்நிலையில் பல்லடம் திருப்பூர் சாலை சின்னக்கரை பேருந்து நிறுத்தத்தில் சந்தேகத்துக்கிடமான வகையில் இருந்த மூன்று நபர்களைப் பிடித்து பல்லடம் காவல் நிலையம் அழைத்து வந்து போலீசார் தீவிர விசாரணைக்கு உட்படுத்தினர். அதேபோல் பல்லடம் கோவை தேசிய நெடுஞ்சாலையில் காரணம்பேட்டை பகுதியில் சந்தேகத்துக்கிடமான வகையில் நடமாடிக் கொண்டிருந்த இரண்டு ஆசாமிகளை பிடித்து பல்லடம் காவல் நிலையம் அழைத்துச் சென்று போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.அதில் போலீசாரிடம் பிடிபட்ட ஐந்து நபர்களுக்கும் பூட்டிய வீடுகளில் நகைகள், பணம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவத்தில் தொடர்பு இருப்பது தெரியவந்தது.இதனை அடுத்து ஒடிசா மாநிலம் மதுசூதனன் மொகந்தி 34,கோவை பீளமேடு பாலசுப்பிரமணி 26,அதே பகுதியைச் சேர்ந்த சுரேஷ் 25,விஷ்ணு 30, கோவை வீரபாண்டி பிரிவு வினோத் குமார் 33 ஆகிய ஐந்து பேரையும் கைது செய்த பல்லடம் போலீசார் அவர்களிடம் இருந்து 17 சவரன் தங்க நகைகள் ரூ.30,000 த்தை மீட்டனர் .மேலும் கொள்ளை சம்பவத்திற்கு பயன்படுத்திய மூன்று இருசக்கர வாகனங்களையும் பறிமுதல் செய்துள்ளனர்.
- மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை ஆலோசனை கூட்டம்மதுரையில் மக்கள் தேசம் கட்சி அகில இந்திய ஆதிதிராவிடர் பறையர் பேரவை மாநில மாவட்டம் ஒன்றியம் […]
- கூடலூர் அருகே கரிய சோலை தொடக்கப்பள்ளியின்வெள்ளி விழாகரிய சோலை தொடக்கப்பள்ளியில் 25-ஆம் ஆண்டு வெள்ளி விழாவில் கோலாகலமாக நடைபெற்றது. மாணவர்களின் கண்கவர் கலை […]
- என் மக்களுக்காக பணியாற்றுவதை வரமாக கருத்துகிறேன்-நிதியமைச்சர் பி.டி.ஆர். பேச்சு30ஆண்டுகள் வெவ்வேறு நாடுகளில் பணியாற்றிய அனுபவங்களை பெற்று அதை அனைத்தையும் இணைத்து ஐம்பது வயதிற்கு மேல் […]
- ராகுல்காந்தியின் எம்.பி பதவி பறிப்பு -குமரி கிழக்கு,மேற்கு மாவட்டங்களில் தர்ணாராகுல் காந்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் தகுதி நீக்கம் செய்தபிரதமர் மோடியைகண்டித்து.குமரிகிழக்கு,மேற்கு மாவட்டங்களில் காங்கிரஸ் தர்ணா போராட்டம்.தமிழ் […]
- கணவனை சரமாரியாக வெட்டி படுகொலை செய்த மனைவிதிருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன் குளத்தில் குடும்ப பிரச்சினை காரணமாக கணவன் தலையில் கல்லை போட்டு சரமாரியாக […]
- இலவச கண் பரிசோதனை மற்றும் கண் புரை அறுவை சிகிச்சை முகாம்சென்னை சாலிகிராமம் கே.கே.சாலையில் அமைந்துள்ள காவேரி அரசு பள்ளியில் இலவச கண் பரிசோதனைமற்றும் கண் புரை […]
- முதல்வர் , நிதி அமைச்சருக்கு புனித ஜார்ஜ் பேராலயத்தில் சிறப்பு பிரார்த்தனைபேராலயத்திற்கு வளர்ச்சிப் பணிக்காகவும் , சீரமைப்பு பணிக்காகவும் பட்ஜெட் அறிக்கையில் நிதி ஒதுக்கியதற்கு நன்தெரிவிக்கும் விதமாக […]
- 36ஒன்வெப் செயற்கைகோள்களை வெற்றிகரமாக ஏவிய இஸ்ரோஇந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் இஸ்ரோ 36 OneWeb செயற்கைக்கோள்களின் (ISRO 36 OneWeb) இரண்டாவது […]
- இன்று இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள்இயற்பியலுக்கான முதலாவது நோபல் பரிசு வென்ற, எக்ஸ் கதிர்களை கண்டுபிடித்த வில்லெம் ரோண்ட்கன் பிறந்த நாள் […]
- டெல்லியில் சத்தியாகிரக போராட்டம்- தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புஇந்தியா முழுவதும் காங்கிரசார் சத்தியாகிரக போராட்டம்- டெல்லியில் தடையை மீறி கார்கே-பிரியங்கா பங்கேற்புபிரதமர் மோடியை ராகுல்காந்தி […]
- விண்ணில் பாய்ந்தது ‘எல்.வி.எம்3-எம்3 ராக்கெட்’வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்த எல்.வி.எம்.3 ராக்கெட் செயற்கைகோள்களை சுற்றுவட்டபாதையில் நிலை நிறுத்தியது.இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் […]
- பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன்- ஓ.பன்னீர்செல்வம்அ.தி.மு.க.வில் பழைய விதிகள் தொடர்ந்தால் பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடுவேன் எனஓ.பன்னீர்செல்வம் அதிரடி அறிவிப்புமயிலாடுதுறை அ.தி.மு.க. ஓ.பி.எஸ். […]
- சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில் இலவச கண் மருத்துவ முகாம்சோழவந்தான் நகர அரிமா சங்கம் சார்பில்.இலவச கண் மருத்துவ முகாம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தானில் நகர […]
- திருப்பரங்குன்றம் கோயிலில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்திருப்பரங்குன்றம் சுப்பிரமணியசுவாமி கோயில் பங்குனி பெருவிழா கொடியேற்றத்துடன் துவக்கம்ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு ஸ்வாமி தரிசனம் […]
- ‘பருந்தாகுது ஊர்க் குருவி’ – சினிமா விமர்சனம்டிஜிட்டல் மார்க்கெட்டிங் துறையில் முன்னணி நிறுவனமாக வலம் வரும் Lights On Media நிறுவனம், தனது […]