• Fri. Mar 29th, 2024

நாளை விண்ணில் பாய்கிறது பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட்

ByA.Tamilselvan

Jun 29, 2022

பிஎஸ்எல்வி சி-53 ராக்கெட், டிஎஸ்-இஒ என்ற புவி கண்காணிப்பு செயற்கைக்கோளுடன் நாளை விண்ணில் பாய்கிறது. ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி ஆராய்ச்சி மையத்திலிருந்து நாளை மாலை 6 மணிக்கு ராக்கெட் விண்ணில் பாய்கிறது. டிஎஸ்-இஓவுடன் சிங்கப்பூரின் என்இயு-சாட், ஸ்கூப் 1 ஆகிய செயற்கைக்கோள்களும் நாளை விண்ணில் நிலைநிறுத்தப்படுகிறது. இந்த செயற்கைக்கோள் அதிக தெளிவுடன் ஒரே நேரத்தில் பலகோணங்களில் பூமியை படம் எடுக்கும் திறனுடையது. சி-53 ராக்கெட்டை விண்ணில் ஏவுவதற்கான 25 மணிநேர கவுன்ட்டவுன் இன்று மாலை 5 மணிக்கு துவங்குகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *