• Mon. Jul 27th, 2026
WhatsAppImage2026-07-23at2343124
previous arrow
next arrow
Read Now

திருச்சி சூர்யா கைது …

பச்சிளங்குழந்தை பற்றி அவதூறு பேசியதை தொடர்ந்து – திருச்சி சூர்யா கைது செய்து தலைமறைவான முக்தாரை வலைவீசி போலீசார் வருகின்றனர்.

பாஜக பிரமுகர் அலிசா அப்துல்லாவின் பச்சிளங்குழந்தையை மையப்படுத்தி தரக்குறைவாக பேசிய வழக்கில், யூட்யூபர் திருச்சி சூர்யாவை போலீசார் கைது செய்துள்ளனர்.

”யூடிப்பூர் முக்தார் மற்றும் முன்னாள் பாஜக நிர்வாகியான திருச்சி சூர்யா ஆகியோர் தன்னைப்பற்றியும் தனக்கு பிறந்த இரட்டை குழந்தைகளை பற்றியும் அவதூறாக பேசுவதாகவும், தொடர்ந்து பெண்கள் பற்றி அவதூறாக பேசி வரும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும்” என வலியுறுத்தி இருந்தார். இந்நிலையில் புகாரின் அடிப்படையில் திருச்சி சூர்யாவை கைது செய்த போலீசார், தலைமறைவாக உள்ள யூட்யூபர் முக்தாரை தேடி வருகின்றனர்.