வங்கக் கடலில் மாண்டஸ் புயல் உருவாகி வடதமிழகத்தில் ருத்ர தாண்டவம் ஆடியது . அடுத்த வரும் 12ம் தேதி உருவாகயிருக்கும் புயலுக்கு மொக்கா என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
மாண்டஸ் புயலை அடுத்து உருவாக உள்ள புயலுக்கு ‘மொக்க’ என பெயரிடப்பட்டுள்ளது.ஏமன் நாட்டி்ன் செங்கடல் பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மொக்கவை குறிக்கும் விதத்தில் அடுத்து உருவாகும் புயலுக்கு இந்த பெயர் சூட்டப்பட உள்ளதாம்.வங்க கடலில் டிச.12 ம் தேதி தெற்கு அந்தமான் பகுதியில் உருவாகும் மேலடுக்கு சுழற்சி 14ம் தேதி தீவிரமடையும் ஒருவேளை இது புயலாக மாறினால் அதற்கு”மொக்கா “என பெயர் சூட்டப்படும். இதை இந்தியா உள்ளிட்ட நாடுகள் ஏற்றுக்கொண்டன.மாண்டஸ் கோர தாண்டவம் தற்போதுதான் முடிந்துள்ள நிலையில் மொக்கா என்ன செய்யுமோ…