மகாராஷ்டிரா மாநிலத்தில் பேருந்து பயணத்தின் போது பெண் ஒருவர் செய்த வீரதீர செயல் பெரிய வரவேற்பை பெற்றுள்ளது.
மகாராஷ்டிரா மாநிலம் புனேவை சேர்ந்தவர் யோகிதா சட்டாவ். 40 வயதான இவர் தனது பெண் நண்பர்கள், குழந்தைகளுடன் சிறுர் என்ற பகுதிக்கு பேருந்தில் சென்று இருக்கிறார். அங்கு உறவினர்களை சந்தித்துவிட்டு திரும்பி வரும் போதுதான் அந்த அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது. அரசு பேருந்து ஒன்றில் இவர்கள் வீட்டிற்கு திரும்பி கொண்டு இருந்தனர். அப்போது பஸ் ஓட்டுனருக்கு பாதி வழியில் வலிப்பு ஏற்பட்டு இருக்கிறது.
அதோடு சேர்த்து அவருக்கு நெஞ்சு வலியும் ஏற்பட்டுள்ளது. பஸ்ஸை வேகமாக ஒட்டிக்கொண்டு இருந்த ஓட்டுனர் இதனால் அங்கேயே நிலைகுலைந்தார். பஸ்ஸை கொஞ்சம் கொஞ்சமாக ஸ்லோ செய்தவர், அருகே இருந்த சாலை தடுப்பு ஒன்றில் மோதி பேருந்தை நிறுத்தினார். வலிப்பு மற்றும் நெஞ்சுவலி காரணமாக அங்கேயே பேருந்து ஓட்டுனர் மயங்கி இருக்கிறார்.
இதனால் அவருக்கு அவசர மருத்துவ உதவி தேவைப்பட்டுள்ளது. பேருந்து மோதியதில் முன் சீட்டில் உட்கார்ந்து இருந்த சிலருக்கு காலில் காயம் ஏற்பட்டு இருக்கிறது. உள்ளே இருந்த குழந்தைகள் எல்லோரும் என்ன செய்வது என்று தெரியாமல் குழம்பி போய் கண்ணீர் விட்டுள்ளனர். பெண்கள் பலரும் பதற்றத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். அங்கு இருந்த ஆண்களுக்கும் என்ன செய்வது என்று தெரியவில்லை.
இந்த நிலையில்தான் யோகிதா சட்டாவ் சட்டென சுதாரித்து டிரைவரை தூக்கி இன்னொரு இருக்கையில் அமர வைத்துவிட்டு, பேருந்தை ஓட்ட தொடங்கினார். டிரைவர் சீட்டில் அமர்ந்து பேருந்தை வேகமாக இயக்கிய யோகிதா சட்டாவ் சுமார் 10 கிலோ மீட்டர் தூரம் பேருந்தை ஓட்டி சென்று இருக்கிறார். மருத்துவமனைக்கு வேகமாக ஓட்டி சென்ற யோகிதா சட்டாவ் அந்த டிரைவரின் உயிரை காப்பாற்றி உள்ளார்.
யோகிதா சட்டாவ் 10 கிமீ தூரத்திற்கு பேருந்தை பாதுகாப்பாக ஓட்டி சென்றதோடு உரிய நேரத்தில் அந்த டிரைவரை மருத்துவமனைக்கு கொண்டு சென்றுள்ளார். இதற்கு முன் நான் பஸ் ஒட்டியது இல்லை. மெடிக்கல் எமர்ஜென்சி என்பதால் ஓட்டினேன். எனக்கு கார் ஓட்டி பழக்கம் இருக்கிறது. லைசன்ஸ் இருக்கிறது. அந்த பேருந்து டிரைவர் உயிரை காக்க வேண்டும் என்று நினைத்தேன்.
அந்த நேரத்தில் எனக்கு வேறு வழி தெரியவில்லை. இதனால் பேருந்தை வேகமாக ஓட்டிச்சென்றேன். அதே சமயம் பேருந்தில் இருந்த மற்ற பயணிகளின் பாதுகாப்பும் முக்கியம். அதனால் வேகமாக சென்றாலும் பேருந்தை முடிந்த அளவு பாதுகாப்பாக ஓட்டினேன். அவர் உயிரை காப்பாற்றியது சந்தோஷம் அளிக்கிறது என்று அவர் குறிப்பிட்டுள்ளார். பதற்றமான நேரத்தில் வேகமாக செயல்பட்டு பேருந்தை ஓட்டிச்சென்ற யோகிதா சட்டாவை பலரும் பாராட்டி வருகிறார்கள். அவர் பஸ் ஓட்டும் வீடியோ இணையம் முழுக்க வைரலாகி வருகிறது.
- மதுரையில் பாஜக வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டம்மதுரை மாவட்ட நீதிமன்றம் முன்பாக பாஜக வழக்கறிஞர்கள் பிரிவு சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது .மதுரை […]
- சிவகாசி சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் சிறைவிருதுநகர் மாவட்டம் சிவகாசி பகுதியைச் சேர்ந்த சிறுமி, தற்கொலைக்கு காரணமான வாலிபருக்கு, வாழ்நாள் முழுவதும் சிறை […]
- வாடிப்பட்டியில் அதிமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்மதுரை மாவட்டம் வாடிப்பட்டி பஸ் நிலைய முன்பாக வடக்கு ஒன்றிய அ.தி.மு.க சார்பாக உயர் நீதிமன்ற […]
- திருப்புவனம் அருள்மிகு புஷ்பனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன்கோயிலில் பங்குனி உற்சவ விழாசிவகங்கை மாவட்டம் திருப்புவனம் அருள்மிகு புஷ்பவனேஸ்வரர் சௌந்தரநாயகி அம்மன் பங்குனி உற்சவ விழாவில் 71 வது […]
- உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுக தொண்டர்கள் கொண்டாட்டம்அதிமுக பொதுக்குழு குறித்த உயர்நீதிமன்ற தீர்ப்பை வரவேற்று உதகை காபிஹவுஸ் சதுக்கத்தில் அதிமுகவினர் நடனமாடி, பட்டாசு […]
- மதுரையில் பெண்குழந்தை விற்பனை -மூன்று பெண்கள் சிக்கினர்மதுரை அரசு ராஜாஜி மருத்துவமனையில் பெண்குழந்தை விற்கப்பட்டதாக மூன்று பெண்களை பிடித்து போலீசார் விசாரணைநடத்தி வருகின்றனர்.ஆரப்பாளயத்தில் […]
- விருதுநகர் நகர் அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி கொண்டாட்டம்பொதுச்செயலாளராக எடப்பாடி பழனிசாமி பொறுபேற்றுக்கொண்டதை முன்னிட்டுவிருதுநகரில் நகர அதிமுக சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- சேலம் ஊமகவுண்டன்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி ஆண்டுவிழாஅரை நூற்றாண்டுக்கும் மேலாக இயங்கி வரும் அரசு தொடக்கப்பள்ளியில் முதல் முறையாக ஆண்டுவிழா நடைபெற்ற நிகழ்வு […]
- திருவில்லிபுத்தூரில், வனத்துறை மோப்ப நாய் உயிரிழப்பு…விருதுநகர் மாவட்டம் திருவில்லிபுத்தூர் வனத்துறை அலுவலகத்தில் இருந்த மோப்ப நாய், வயது முதிர்வு காரணமாக உயிரிழந்தது. […]
- நத்தம் கோவில் திருவிழாவில் ஆண்கள் பங்கேற்கும் கறிவிருந்து..!நத்தம் அருகே உள்ள வேட்டைக்காரன் கோவிலில் வருடந்தோறும் ஆண்கள் மட்டுமே கலந்து கொள்ளக்கூடிய கறிவிருந்து திருவிழா […]
- அதிமுக மதுரை மாநகர் சார்பாக பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாட்டம்பொதுச் செயலாளர் ஆனார் எடப்பாடி பழனிசாமி- மதுரை மாநகர் அதிமுகவினர் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி […]
- மதுரை குருவிக்காரன் சாலையில் ஒரு சம்மர் ஸ்பாட்..!தமிழகம் முழுவதும் சில இடங்களில் கோடை வெயிலின் தாக்கம் சதம் அடித்து வரும் நிலையில், மதுரையில் […]
- நெல்லையில் இருகைகளால் திருக்குறளை எழுதி அசத்திய மாணவி..!நெல்லையில் மாணவி ஒருவர் இருகைகளாலும் திருக்குறளை எழுதி சாதனை படைத்திருப்பது அனைவரையும் வியக்க வைத்திருக்கிறது.திருநெல்வேலி மாவட்டம் […]
- ராமநாதபுரம் மாவட்ட பா.ஜ.க. நிர்வாகிகள் கூண்டோடு கலைப்பு..!பா.ஜ.க.வின் உட்கட்சிப் பூசலால், ராமநாதபுரம் மாவட்ட நிர்வாகிகள் கலைக்கப்பட்ட சம்பவம் அக்கட்சியில் புயலை ஏற்படுத்தியுள்ளது.தமிழக பாஜகவில் […]
- மதுரையில் சொகுசு காரை அடித்து நொறுக்கிய ஆறு பேர் கைது..!மதுரையில் உள்ள மதுபானக்கடை முன்பு நிறுத்தியிருந்த காரை அடித்து நொறுக்கி சேதப்படுத்திய ஆறு பேர் கைது […]