ஈரானில் மேலும் 100 மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் மக்கள் மத்தியில் பெரிய கொந்தளிப்பை ஏற்படுத்தி, அங்கு போராட்டம் வெடிக்கத் தொடங்கியிருக்கிறது.
ஈரான் தலைநகரில் டெஹ்ரான் அடுத்த கோம் நகரில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் முதல் பள்ளிக்குச் சென்ற மாணவிகள் அடுத்தடுத்து உடல் நலம் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். வாந்தி, வயிற்று வலி, தலைவலி, மூச்சு விடுவதில் சிரமம் போன்ற காரணங்களால் மாணவிகள் அடுத்தடுத்து அனுமதிக்கப்பட்ட நிலையில் மருத்துவ பரிசோதனையில் மாணவிகள் உடலில் நஞ்சு கலந்திருந்தது தெரிய வந்தது.
இதனால் அந்த விவகாரம் ஈரானில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தின. கடந்த மாதத்தின் இறுதியில் இந்த சம்பவம் குறித்து பத்திரிகையாளர்களிடம் பேசிய ஈரான் சுகாதாரத்துறை அமைச்சர் யூனுஸ், மாணவிகளுக்கு வேண்டுமென்றே கொடுக்கப்பட்டிருப்பதாக அதிர்ச்சியான தகவல்களை தெரிவித்தார்.
மாணவிகள் பள்ளியில் சென்று படிப்பதை தடுப்பதற்காகவே மத அடிப்படைவாதிகளால் விஷம் கொடுக்கப்பட்டிருப்பதாக ஊடகங்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகி வந்தன. இந்த விவகாரம் சர்வதேச அளவில் கவனம் பெற்றது. இது தொடர்பாக ஈரான் அரசு விசாரணையை தொடங்கியது. ஆனாலும் பள்ளி மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்படும் சம்பவம் தொடர்ந்து வரும் அவலம் இருக்கிறது. நேற்று முன்தினம் ஒரே நாளில் ஈரானில் 10 மாகாணங்களில் 100க்கும் மேற்பட்ட மாணவிகளுக்கு விஷம் கொடுக்கப்பட்ட சம்பவம் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. 10 மாகாணங்களில் 30க்கும் மேற்பட்ட பெண்கள் பள்ளியில் படிக்கும் மாணவிகளை குறிவைத்து இந்த கொடூர சம்பவத்தை அரங்கேற்றி இருப்பது தெரிய வந்திருக்கிறது.
பாதிக்கப்பட்ட மாணவிகள் அருகில் உள்ள மருத்துவமனைகளில் சேர்க்கப்பட்டுள்ளனர். சம்பவம் நடந்த பள்ளிக்கூடங்களின் முன்பாக மாணவிகளின் பெற்றோர் பதற்றத்துடன் கூடி நின்று போராடி வருகின்றனர். பெண்களின் கல்வி உரிமையை பறிக்கும் நோக்கில் அவர்களுக்கு விஷம் வைக்கப்படும் விவகாரத்தில் அரசுக்கு எதிராக பெரும் போராட்டம் வெடித்திருக்கிறது. மாணவிகளுடன் பெற்றோரும் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்தி வருகின்றார்கள்.
இது குறித்து ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி, இந்த சம்பவம் ஒரு வெளிநாட்டு சதி இதன் மூலம் நமது எதிரிகள் பெற்றோர்கள் மாணவர்களிடையே அச்சத்தையும் பாதுகாப்பு உண்மையையும் ஏற்படுத்த முயற்சி செய்கிறார்கள் என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.
- இன்று கனிமவியலின் தந்தை சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள்கனிமவியலின் தந்தை, ஜெர்மன் அறிவியல் அறிஞர் சார்சியஸ் அகிரிகோலா பிறந்த நாள் இன்று (மார்ச் 24, […]
- சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் அக்கட்சியில் இருந்து விலகல்..!சேலம் மாவட்ட பா.ஜ.க செயலாளர் குட்டி என்கிற சோலை குமரன் என்பவர் அக்கட்சியில் இருந்து திடீரென […]
- ஆருத்ரா நிதிநிறுவன மோசடி வழக்கில் இருவர் அதிரடி கைது..!பொதுமக்களிடம் அதிக வட்டி தருவதாக ஆசைவார்த்தை கூறி மோசடி செய்த வழக்கில், ஆருத்ரா நிதிநிறுவனத்தைச் சேர்ந்த […]
- சிவகாசி அருகே பட்டாசு ஆலையில் திடீர் வெடி விபத்து…..சிவகாசி அருகே பட்டாசு ஆலை வெடிவிபத்து. முன்னெச்சரிக்கையாக செயல்பட்டதால் யாருக்கும் காயமின்றி தொழிலாளர்கள் தப்பினர்.விருதுநகர் மாவட்டம் […]
- பொது அறிவு வினா விடைகள்
- குஷி’ திரைப்படத்தின் வெளியீட்டு தேதி அறிவிப்புதெலுங்கின் முன்னணி இளம் நட்சத்திர நடிகரான விஜய் தேவரகொண்டா கதையின் நாயகனாக நடித்திருக்கும் ‘குஷி’ திரைப்படத்தின் […]
- ‘தீராக் காதல்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியீடுநடிகர் ஜெய்யுடன் நடிகைகள் ஐஷ்வர்யா ராஜேஷ் மற்றும் ஷிவதா இணைந்து நடித்திருக்கும் புதிய திரைப்படத்திற்கு ‘தீராக் […]
- குறள் 409மேற்பிறந்தா ராயினும் கல்லாதார் கீழ்ப்பிறந்தும்கற்றார் அனைத்திலர் பாடு.பொருள் (மு.வ): கல்லாதவர் உயர்ந்த குடியில் பிறந்தவராக இருப்பினும் […]
- ராகுலுக்கு சிறை தண்டனை -சென்னை மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி சார்பாக ஆர்ப்பாட்டம்காங்கிரஸ் எம்பி ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளதை கண்டித்து காங்கிரஸ் கட்சியினர் […]
- ராகுல் காந்திக்கு சிறை தண்டனை -கன்னியாகுமரியில் காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம்சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டதை கண்டித்து கன்னியாகுமரியில் காங்கிரஸ் […]
- இன்று மற்றொரு பூமி-சனியின் துணைக்கோள் டைட்டன் கண்டுபிடிக்கப்பட்ட தினம்டைட்டன் (Titan) ஆனது முதலில் அறியப்பட்ட சனியின் நிலவாகும். டச்சு வானியலாளர் கிறிஸ்டியான் ஹைஜென்சால் மார்ச் […]
- மதுரையில் சிறுவன் மீது இருசக்கர வாகனம் மோதி விபத்து – பதறவைக்கும் வீடியோமதுரையில் சிறுவன் மீது அதிவேகமாக வந்த இருசக்கர வாகனம் மோதி விபத்து – சிசிடிவி காட்சிகள் […]
- மதுரை மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழாமதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே மேலக்கால் சி எஸ் ஐ.சான்றலர் ஆலய நூற்றாண்டு விழா மற்றும் […]
- அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை.?பிரச்சார பயணம்அனைத்திந்திய இளைஞர் பெருமன்றம் சார்பில் எங்கே எனது வேலை என்ற கோள்வியோடு கன்னியாகுமரி,வேதாரண்யம்,ஓசூர்சென்னை என் நாங்கு […]
- உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு 100 மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சிமதுரை மாவட்டம் திருமங்கலத்தில் உலக வனநாள், உலக தண்ணீர் தினத்தை முன்னிட்டு திருமங்கலம் நகராட்சி, சித்தர்கூடம்திருமங்கலம் […]