பல்லடம் வாவிபாளையம் அருகே பிஏபி வாய்க்கால் ஓர விவசாயக் கிணறுகளில் மின்னிணைப்பு துண்டிக்க வந்த மின்வாரிய அதிகாரிகளை சிறைபிடித்த விவசாயிகள் போராட்டம் நடத்தினர்.மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பிச் சென்ற அதிகாரிகள்!!!
திருப்பூர் மாவட்டம் பல்லடம் வாவிபாளையம் அருகே கோவை மாவட்ட எல்லை பகுதியான வரபாளையம் பகுதியில் நூற்றுக்கணக்கான விவசாயிகள் ஆயிரக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்களில் தென்னை உள்ளிட்ட பல்வேறு பயிர் சாகுபடிகளில் ஈடுபட்டு வருகின்றனர். இப்பகுதி விவசாயத்திற்கு அப்பகுதி வழியே செல்லும் பரம்பிக்குளம் ஆழியாறு பாசன திட்ட வாய்க்கால் தண்ணீர் நீர் ஆதாரமாக விளங்கி வருகிறது. இந்த நிலையில் கடைமடை வரை பிஏபி வாய்க்காலில் தண்ணீர் சென்று சேரும் வகையில் வாய்க்கால் ஓரங்களில் உள்ள விவசாயக் கிணறுகளில் மின் இணைப்புகளை துண்டிக்க அரசு உத்தரவிட்டு உள்ளதாக கூறப்படும் நிலையில் அதனை நிறைவேற்றும் வகையில் கேத்தனூர் மின்வாரிய உதவி பொறியாளர் சத்திய நாராயணன் தலைமையில் மின்வாரிய அதிகாரிகள் இன்று அப்பகுதியில் உள்ள சில மின் இணைப்புகளை துண்டிக்கும் நடவடிக்கையின் ஒரு கட்டமாக இரண்டு விவசாயிகளுக்கு நோட்டீஸ் கொடுக்க அப்பகுதிக்கு சென்றனர்.
இது பற்றி தகவல் அறிந்து அங்கு நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் விவசாய தொழிலாளர்கள் திரண்டு மின்வாரிய அதிகாரிகளை முற்றுகையிட்டும் சிறை பிடித்தும் கடும் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.மின்னிணைப்பை துண்டிப்பதாக இருந்தால் ஒட்டுமொத்த விவசாயிகளின் மின் இணைப்பையும் துண்டித்துக் கொள்ளுமாறு கூறி அதிகாரிகளிடம் அப்பகுதி விவசாயிகள் வாக்குவாதத்திலும் ஈடுபட்டனர்.இதனால் அதிகாரிகள் நோட்டீஸ் வழங்கும் பணியை நிறுத்தி துண்டிப்பு நடவடிக்கையை கைவிட்டு திரும்பி சென்றனர்.இதுகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறுகையில் இயற்கை ஆதாரமான மழை நீரை கருத்தில் கொண்டே பல்வேறு பயிர் சாகுபடிகளை இதுவரை செய்து வருவதாகவும் இதுபோன்ற மின் இணைப்பு துண்டிப்பு நடவடிக்கைகளை மின்வாரி அதிகாரிகள் கைவிட தமிழக முதல்வர் உடனடியாக நடவடிக்கை எடுத்து விவசாயத்தையும் அதனை நம்பி வாழ்கிற ஆயிரக்கணக்கான தொழிலாளர் குடும்பங்களையும் தமிழக அரசு பாதுகாக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்துள்ளனர்.
- திண்டுக்கல்லில் பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில்..,
கட்டணம் வசூலிப்பதாக புகார்..!திண்டுக்கல் ரயில்வே நிலையத்திற்கு அதிகாலை நேரத்தில், தமிழக அரசு பெண்களுக்கு விடப்படும் இலவச பேருந்துகளில் கட்டணம் […] - சிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ரூ. 9 லட்சம் செலவில் சாலை வசதிசிவகாசி அருகே மாற்றுத்திறனாளிகள் பள்ளிக்கு ராம்கோ சிமெண்ட்ஸ் நிறுவனத்தின் சார்பாக சாலை வசதி அமைத்து கொடுக்கப்பட்டது.விருதுநகர் […]
- திருப்பரங்குன்றம் முருகன் கோயில் தேரை இழுக்க கிராம மக்களுக்கு அழைப்பு..!மதுரை மாவட்டம், திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் பங்குனி உற்சவ திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கி […]
- பீகார் மாணவிகள் நாகர்கோவிலில் கல்வி பயில்வது தேச ஒற்றுமைக்கு எடுத்துக்காட்டு -தமிழிசைபீகாரில் இருந்து மாணவிகள் இங்கு வந்து கல்வி பயின்று வருகின்றனர் இதை பார்க்கின்ற போது தேசிய […]
- ஏப்ரல் 1ம் தேதி ஆளுநர் ஆர்என்.ரவி ராஜபாளையம், சிவகாசிக்கு வருகைவிருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சிவகாசியில் உள்ள கல்லூரிகளின் விழாவில், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி கலந்து […]
- முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனைஆபத்தான இதய சிதைவினால் பாதிக்கப்பட்ட முதியவரின் உயிரை காப்பாற்றிய மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை.தென் தமிழ்நாட்டில் […]
- மதுரையில் மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் ஆயத்த கூட்டம்மதுரை மாட்டுத்தாவணி பகுதியில் தமிழ்நாடு மாநில தொடக்க கூட்டுறவு வங்கி அனைத்து பணியாளர்கள் சங்கத்தின் சார்பில் […]
- நீலகிரி அருகே மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்புநீலகிரி மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழை காரணமாக மரம் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது. […]
- மஞ்சூர் பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளில் அகற்றப்படாத குப்பைகளால் நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளதால் உடனடியாக […]
- ரவி தேஜா நடிக்கும் ‘டைகர் நாகேஸ்வரராவ்’ வெளியீட்டு தேதி அறிவிப்பு‘மாஸ் மகாராஜா’ ரவி தேஜா- இயக்குநர் வம்சி -தயாரிப்பாளர் அபிஷேக் அகர்வால் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் […]
- உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு..!!உக்ரைனில் இருந்து நாடு திரும்பிய மருத்துவ மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பினை மத்திய அரசு வெளியிட்டுள்ளதுஉக்ரைன் மற்றும் […]
- ராமதாஸின் நிலைப்பாட்டை தவிர்க்க கோரிக்கைதமிழ்நாடு முழுவதும் உள்ள கடைகளில் தமிழில் பெயர் பலகை இல்லாவிட்டால் அதனை மையிட்டு அழிப்போம் என […]
- நெருக்கமாக நடிக்க என்ன காரணம் அம்மா நடிகையின் வாக்குமூலம்“தெலுங்கு நடிகை சனா. சுமார் 200 படங்களில் துணை வேடங்களில் நடித்துள்ளார். நடிகை சனாவின் முழுப் […]
- மேற்கத்திய நாடுகளில் இசை கச்சேரி நடத்தும் யுவன்சங்கர்ராஜாசமீபத்திய ‘லவ் டுடே’ உள்ளிட்ட பல்வேறு சூப்பர் ஹிட் ஆல்பங்களின் முகவரியான இந்தியாவின் முன்னணி இசையமைப்பாளர் […]
- ஜப்பானில் – ரிக்டர் அளவுகோலில் 6.1 அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்ஜப்பானில் நிலநடுக்கம் நேற்று மாலை 6.18 மணிக்கு 20 கி.மீ ஆழத்தில் ஏற்பட்டது. கடும் நிலநடுக்கத்தால் […]