• Sat. Apr 20th, 2024

இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது-டி.டி.வி.தினகரன்

ByA.Tamilselvan

Jan 24, 2023

ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளதாக டிடிவி தினகரன் பேச்சு. சிவகங்கை அருகே உள்ள பாகனேரி கிராமத்தில் நடந்த கொடியேற்றும் நிகழ்ச்சியில் அ.ம.மு.க. பொதுச்செயலாளர் டி.டி.வி.தினகரன் கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களிடம் பேசிய அவர்..:- ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அ.ம.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் யார்? என்று வருகிற 27-ந்தேதி அறிவிக்கப்படும். அங்கு நானே போட்டியிட வாய்ப்புள்ளது. அ.தி.மு.க. 2 அணிகளும் இணைவது என்பது அத்தைக்கு மீசை முளைப்பது போன்றதாகும். ஓ.பி.எஸ்., இ.பி.எஸ். பிரச்சினையால் இரட்டை இலை சின்னம் முடங்க வாய்ப்புள்ளது. தேர்தல் வாக்குறுதிகள் எதையும் தி.மு.க. நிறைவேற்றவில்லை. இதனால் அவர்கள் மக்களை சந்திக்க அஞ்சி ஒளிகின்ற நிலை ஏற்பட்டுள்ளது. இடைத்தேர்தலில் தோற்கடித்து தி.மு.க.வுக்கு மக்கள் அதிர்ச்சி வைத்தியம் அளிப்பார்கள். இவ்வாறு அவர் கூறினார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *