
பெரம்பலூர் மாவட்ட காவல்துறையில் இயங்கி வரும் மோப்ப நாய்ப் படைப்பிரிவிற்கு வெடிபொருள் (EXPLOSIVE) கண்டுபிடிப்பிற்காக, புதிதாக மோப்ப நாய்க்குட்டி காவல்துறையின் சார்பில் வாங்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இன்று 21.02.2025 -ம் தேதி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஆதர்ஷ் பசேரா மேற்படி நாய்க்குட்டிக்கு ஜெனி (JENNY)* என்று பெயர் சூட்டினார்.
இந்நிகழ்வின்போது, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் T.மதியழகன் மற்றும் மாவட்ட குற்றப்பிரிவு துணைக்காவல் கண்காணிப்பாளர் E.காமராஜ் ஆகியோர்கள் உடனிருந்தனர்.
