கரூரில் பணமா, ஜனமா என்றால் எனக்கு ஜனம் தான் முக்கியம் என்று விஜய் வழக்கமான பஞ்ச் டயலாக் பேசி முழுங்கினார். தமிழக மக்களுக்கு நேர்மையான, ஊழலற்ற நிர்வாகத்தை வழங்குவேன் என தொடர்ந்து விஜய் பேசி வருகிறார் .இப்படி பேசும் விஜய்க்கு கூட்டணி கடசிகள் பல்லாக்கு தூக்கி ,பாசுரம் பாடி போட்டி போட்டுக் கொண்டு வருகிறது. இந்த நிலைமை பார்த்து மக்கள் முகம் சுளிக்கிறார்கள்.
சுருக்கமாக அந்த கட்சிகள் எல்லாம் ஆட்சி அதிகாரம் எந்த கட்சியில் இருக்கிறதோ, அந்த கட்சியிலே நாங்கள் இருப்போம் என்று இந்த த.வெ.க கூட்டணி கட்சிகள் சுருக்கமாக சொல்லிவிட்டால் இத்தனை வசனங்களையும் ,நாடகங்களையும் அரங்கேற்ற வேண்டியதில்லை

இந்தக் கூட்டணிக் கட்சிகள் எல்லாம் தேர்தலுக்கு முன்பாக கரூர் சம்பவத்தை வைத்து குறைந்தபட்சம் மனிதநேயம் கூட விஜய் இல்லை என்றும், சினிமா கவர்ச்சியில் இருக்கிறார்விஜய் என்று விமர்சித்தவர்கள் எல்லாம் இன்றைக்கு புதிய உறவுக்கு நியாயம் கற்பித்திட கற்பனை கதைகளை அளந்து விடுவது ஆச்சிரியத்தை ஏற்படுகிறது.
பெரும்பான்மை இல்லாத விஜய், பெரும்பான்மை நிரூபிக்க
விஜய் நேர்மையான, வெளிப்படையான அணுகுமுறையை கையாண்டாரா இதுதான் இப்போதைய கேள்வியாக இருக்கிறது.
இரட்டை இலை சின்னத்தில் வெற்றி பெற்ற அதிமுக சட்டமன்ற உறுப்பினர்களை பொதுச் செயலாளரிடம் இருந்து அபகரித்து அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைத்து கட்சிகளுக்கும் விஜய் அதிகார ஆஃபர் கொடுத்தாரா இல்லையா என்பது மனசாட்சியை தொட்டு விஜய் சொல்லட்டும்.அதிகார ஆபர் எதுவும் வழங்காமல் தான் நாங்கள் பெரும்பான்மையை நிரூபித்து இருக்கிறோம் என்று சொன்னால் இது எப்படி நாடு ஏற்றுக்கொள்ளும்.
விஜய் தலைமையில் த.வெ.க அரசு வெறும் கவர்ச்சியும் வசீகரமும் உள்ள சைனா பொம்மை போன்றது .சைனா பொம்மை ரொம்ப வசீகரமாகவும், கவர்ச்சியாகவும், உடனே கவனத்தை ஈர்க்கிற மாதிரி இருக்கும் ஆனால் அது ஆயுள் அற்ப ஆயுள் என்பதை அதை பயன்படுத்துகிற போது தான் நமக்கு புரிய வரும்.அதிமுக அரசு ஐஎஸ்ஐ முத்திரை கொண்ட அக்மார்க் அரசாக ஆயிரம் ஆயிரம் சாதனை திட்டங்களை வழங்கி இருக்கிறது என்பதை மக்கள் நன்றாக அறிவார்கள்
இன்றைக்கு விஜய் தலைமையிலான த.வே.க அரசு வசீகரதால் மிக மிஞ்சி தகதகன்ன ஜொலிக்கலாம் தமிழக மக்களை எழுதி வைத்துக் கொள்ளுங்கள் த.வெ.க அரசின் ஆயுள் காலம் எண்ணப்பட்டு வருகிறது .
விஜய் தலைமையிலான த.வெ.க அரசு இன்னும் சில காலம் மட்டுமே என்று உதயகுமார் ஜோசியம் சொல்லவில்லை கள நிலவரத்தை தமிழ்நாட்டு மக்களோடு எடுத்து வைக்கின்றேன் .
தேர்தல் முடிவுக்கு பின்னால் ஆட்சி மாறி இருக்கலாம் இந்த 80 நாட்களிலே விஜய் தலைமையிலான அதிகார சிஸ்டம் மாறவில்லை அப்படித்தான் தொடர்ந்து உள்ளது.
பழனி கோயில் நில மோசடி விவகாரம் விஜய் தலைமையிலான த.வெ.க அரசுக்கு தலையிலே விழுந்த முதல் அடி பத்திரப்பதிவு முதல் பணி மாறுதல் வரை எல்லா திட்டமிட்டு ஒரு திரைக்கதை போல தொடர்ந்து நடந்திருக்கின்றன முதல்வர் இதற்கு இதுவரை விளக்கம் சொல்லவில்லை. ஏனென்றால் ஸ்கிரிப்ட் இல்லாமல் முதல்வர் பேச முடியாது இந்து சமயத் துறை அமைச்சர் பதில் சொல்ல தடுமாறுகிறார்.
30 ஆண்டு காலம் இருக்கும் ஒரு கோயில் நிலப் பிரச்சனையில் ஒரு பெரிய அதிகாரம் பலம் இல்லாமல் சட்ட விரோதமாக இந்த மோசடி பத்திர பதிவு செய்து விட முடியுமா ?இது சாமானிய தமிழ்நாட்டு மக்களுடைய கேள்வி அப்படி என்றால் மோசடியாக பத்திர பதிவு செய்ய சொன்ன அந்த அதிகாரம் மையம் யார் என்பதை
ஸ்கிரிப்ட் இல்லாமல் இதற்கு பதில் சொல்வதற்கு விஜய்தயாரா
மறுபக்கம் த.வெ.கவினர் ஜனநாயக பணத்திற்கு வசூல் வேட்டை அனல் பறப்பதாக அதிகாரப்பூர்வமான செய்தி அனலை கக்குறது தமிழ்நாடு முழுவதும் வாராண்டா, வாராண்டா வேட்டைக்காரன் என த.வெ.க கட்சியினரை பார்த்து பொதுமக்கள் அச்சத்தில் அலறி அடித்துக் கொண்டு ஓட்டம் பிடிக்கிறார்கள் த.வெ.க நிர்வாகிகள், அமைச்சரவை சகாக்களும் பணம் பண்ணுவதை நோக்கமாக கண்ணும் கருத்துமாக இருப்பதார்கள்.
இதைவிட 15 சட்டமன்ற உறுப்பினர்கள் விலை பேசி 8 சட்டமன்ற உறுப்பினர்கள் விலை போய் இருக்கிறார்கள் பணம் வாங்கி இருக்கிறார்கள் என்று காவல்துறையை வட்டாரத்தில் இருந்து தகவல் போன பின்பு அவர்கள் அந்த அட்வான்ஸ் பணத்தை திருப்பி கொடுத்து இருக்கிறார்கள். பணம் என்று வந்துவிட்டால் தன்னுடைய எம்எல்ஏ கள் வாயை பிளந்து விடுகிறார்கள் என்று இப்போதுதான் புரிந்து இருக்கிறது முதல்வர் விஜய்க்கு
சொந்த கட்சி எம்எல்ஏக்கள் அடுத்த கட்சிக்கு காசு வாங்குவதை தடுக்க முடியாத ஒரு யோக்கியம் இல்லாத ஒரு முதல்வரை தான் இந்த தமிழ்நாடு சந்தித்து இருக்கிறது இதுபோன்ற ஆயிரம் சவால்கள் தமிழகத்தில் ஆட்சி அதிகாரத்திலே இருக்கின்ற போது அதை கையாளுகிற அணுகுமுறையும் விஜய்க்கு தெரியாது ஏன்னா அவர் வசனம் எழுதி ஸ்கிரிப்ட் எழுதி மனப்பாடம் செய்து பேசியதை தவிர எதுவும் தெரியாது
அதிமுக தொண்டனாக சவால் விடுகிறேன் மேகதாது பிரச்சனை, பாலாறு பிரச்சனை ,முல்லை பெரியார் பிரச்சனை, கச்சத்தீவு பிரச்சனை, மின்வெட்டு பிரச்சனை ஆகியவற்றை ஸ்கிரிப்ட் இல்லாமல் வாயை திறந்து கருத்துக்களை எடப்பாடியார் அல்லது என்னிடம்ஒரே மேடையிலே விவாதிப்பதற்கு தயாரா என கூறினார்.




