• Wed. Apr 15th, 2026
WhatsAppImage2026-04-10at0716401
previous arrow
next arrow
Read Now

கடலில் பயன்படுத்தும் பழுப்புகள் திடீரென கரை ஒதுங்கியது..,

ByE.Sathyamurthy

May 1, 2025

செங்கல்பட்டு மாவட்டம், கிழக்கு கடற்கரை சாலை, நெம்மேலியில் உள்ள கடல்நீரை குடிநீராக்கும் திட்டத்தின் மூன்றாவது யூனிட் தயாராகி வரும் நிலையில் அதற்கு பயன்படுத்தப்படும் குடிநீர் பழுப்பு பல கிலோ மீட்டர் தூரத்தில் கடலில் இருந்த நிலையில் குடிநீர் பழுப்புகள் இன்று காலை கரை ஒதுங்கியதை பார்த்த கடல்நீரை குடிநீராக்கும் திட்டம் அதிகாரிகள் தற்பொழுது பொக்லைன் உதவியுடன் கடலில் உள்ளே நகத்தும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

கடல் உள்ளே சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு இருந்த குடிநீர் குழாய் பழுப்பு காலை கரை ஒதுக்கியுள்ளது.

சுமார் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு உள்ள குடிநீர் பழுப்பு கரை ஒதுங்கிய நிலையில் சுமார் 100 க்கும் மேற்பட்ட மீனவர்கள் சிறிய துடுப்பு படகு மூலம் மீன் பிடிக்க கடலுக்கு செல்ல முடியாத சூழலுக்கு தள்ளப்பட்டுள்ளனர்.