• Sun. May 5th, 2024

தெலுங்கு தேசம் கட்சியின் மாநில தலைவர் அதிரடி முடிவு..!

Byவிஷா

Oct 31, 2023

நடைபெறவிருக்கும் 5 மாநில தேர்தல்களில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடவில்லை என்ற அறிவிப்பால், அக்கட்சியின் மாநில தலைவர் அதிரடியான முடிவை எடுத்திருப்பது அக்கட்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நவம்பர் மாதம் இறுதியில் ராஜஸ்தான், சத்தீஸ்கர், தெலுங்கானா, மிசோரம், மத்தியப் பிரதேசம் ஆகிய ஐந்து மாநிலங்களில் சட்ட சபை தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் போட்டியிடுவதற்கு அனைத்து கட்சிகளும் தயாராகி வருகின்றது. இந்நிலையில் தெலுங்கானா மாநிலத்தில் தெலுங்கு தேசம் கட்சி முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
தெலுங்கானா மாநிலத்தில் நவம்பர் மாதம் 30ம் தேதி சட்டமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. அதன் பின்னர் வாக்கு எண்ணிக்கை டிசம்பர் 3ம் தேதி நடைபெற்று அன்றே தேர்தல் முடிவுகள் அறிவிக்கப்படும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இந்நிலையில் தெலுங்கு தேசம் கட்சி வெளியிட்ட அறிவிப்பு கட்சி உறுப்பினர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
அதாவது நவம்பர் மாதம் நடக்கவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் தெலுங்கு தேசம் கட்சி போட்டியிடாது என்று திடீர் அறிவிப்பை அறிவித்தது. இந்த அறிவிப்பு அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில் அந்த கட்சியின் மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் திடீரென்று ஒரு முடிவை எடுத்துள்ளார்.
அதாவது தெலுங்கு தேசம் கட்சி சட்டமன்ற தேர்தலில் போட்டியிடாது என்று அறிவித்ததை அடுத்து தெலுங்கு தேசம் கட்சி மாநில தலைவர் கசானி ஞானேஷ்வர் தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். மேலும் அடுத்தகட்ட நடவடிக்கைகள் என்ன என்பது குறித்தும் ஆலோசனை செய்து வருவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *