ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு எதிராக தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர முடிவு எடுத்துள்ளது.
சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஒப்புதலுக்காக அனுப்பப்பட்ட மசோதாக்கள் மற்றும் அரசு உத்தரவுகளை நிறைவேற்றுவதில் காலதாமதம் செய்வதாக ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசு மனு தாக்கல் செய்ய முடிவு எடுத்துள்ளது. மசோதாக்கள் அரசு உத்தரவுகளுக்கு ஒப்புதல் அளிக்காமல் சர்க்காரியா கமிஷன் பரிந்துரை அடிப்படையில் ஒரு கால வரம்பு நிர்ணயம் செய்ய வேண்டும் எனவும் மனுவில் கோரிக்கை விடுத்துள்ளது.