• Thu. May 7th, 2026
WhatsAppImage2026-05-05at001329
previous arrow
next arrow
Read Now

டாஸ்மாக் கடைகள் நாளை திறக்கப்படாது…

Byகாயத்ரி

Feb 21, 2022

தமிழகத்தில் நடைபெற்று முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை நாளை (பிப்ரவரி 22) நடைபெற இருப்பதால் ஒரு நாள் முழுவதும் டாஸ்மாக் கடைகளை மூட தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது. வாக்கு எண்ணிக்கை நடைபெறும் மாநகராட்சி மற்றும் நகராட்சி எல்லைகளுக்கு உட்பட்ட 5 கிலோ மீட்டர் சுற்றளவில் உள்ள அனைத்து டாஸ்மாக் கடைகளையும் மூட வேண்டும். இந்த உத்தரவை மீறி மதுபானம் விற்பனை செய்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.