சென்னை ஐஐடியில் தமிழ்த்தாய் வாழ்த்து, வந்தே மாதரம் பாடல்களையும் இசைக்கலாம் என மத்திய கல்வி அமைச்சக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கடந்த ஆண்டு நவம்பர் 20ஆம் தேதி சென்னை ஐஐடி வளாகத்தில் 58 ஆவது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. அப்போது தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது சர்ச்சையானது. இதையடுத்து தமிழக உயர்கல்வித் துறை அமைச்சர் பொன்முடி ஐஐடி நிறுவனத்தின் இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்திக்கு ஒரு கடிதம் எழுதியிருந்தார். ஐஐடி நிர்வாகம் அந்த கடிதத்தில் தமிழக அரசு தான் 1959 ஆம் ஆண்டு ஐஐடி நிர்வாகத்திற்கு கல்லூரி அமைப்பதற்கு 250 ஹெக்டேர் இடம் வழங்கியது. அது முதல் ஐஐடிக்கு பல்வேறு உதவிகள், சலுகைகளை தமிழ்நாடு அரசு தொடர்ந்து செய்து வந்துள்ளது. ஐஐடியில்அமையவுள்ள கிரையோ எலக்ட்ரான் மைக்ரோஸ்கோப் அமைக்க ரூ 10 கோடி நிதியுதவி கேட்டு உயர்கல்வித் துறை முதன்மை செயலாளருக்கு கடிதம் எழுதியுள்ளீர்கள். இது குறித்து பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஐஐடி பட்டமளிப்பு விழாவில் தமிழ்த்தாய் வாழ்த்து புறக்கணிக்கப்பட்டது ஏமாற்றமடைய செய்துள்ளது
. தமிழகத்தில் நடக்கும் அனைத்து மத்திய அரசு, மாநில அரசு நிகழ்ச்சிகளிலும் பிரதமர், குடியரசுத் தலைவர் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளிலும் கூட தமிழ்த்தாய் வாழ்த்து வருங்காலத்தில் இடம் பெறுவதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும் என அந்த கடிதத்தில் அமைச்சர் பொன்முடி எழுதியிருந்தார்.
கடந்த ஆண்டு டிசம்பர் 17ஆம் தேதி தமிழ்த்தாய் வாழ்த்தை தமிழக அரசின் மாநில பாடலாக முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருந்தார். அனைத்து கல்வி நிலையங்களிலும் பொதுத் துறை நிறுவனங்களிலும் விழா நிகழ்ச்சிகளின் தொடக்கத்தில் தமிழ்த்தாய் வாழ்த்து கட்டாயம் பாடப்பட வேண்டும். பாடலை பாடும் போது மாற்றுத் திறனாளிகள் தவிரஅனைவரும் கட்டாயம் எழுந்து நிற்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.. மேலும் சமீபத்தில் நடந்த குடியரசு தினவிழாவில் ரிசர்வ் வங்கி அதிகாரிகள் தமிழ்தாய் வாழ்த்துக்கு எழுந்து நிற்காமல் இருந்தது பல கண்டணங்களுக்கு உள்ளானது.
இந்த நிலையில் சென்னை ஐஐடியில் அரசு நிகழ்ச்சியின் போது தேசிய கீதத்துடன் வந்தே மாதரம், தமிழ்த்தாய் வாழ்த்து பாட மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது. இது தொடர்பாக விரைவில் சென்னை ஐஐடிக்கு அதிகாரப்பூர்வமான தகவல் தெரிவிக்கப்படும் என மத்திய கல்வி அமைச்சகத்துறை தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு தமிழர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
- குடியரசுத் தலைவர் தேர்தல்: யஷ்வந்த்சின்ஹா வேட்புமனு தாக்கல்..!கடந்த 24ஆம் தேதி, பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பில் குடியரசுத் தலைவர் தேர்தலில் […]
- எம்.ஜி.ஆர் உயிலை சுட்டிக்காட்டி ட்விட் செய்த கே.சி.பழனிச்சாமி..!அ.இ.அ.தி.மு.க.வில் கிட்டத்தட்ட பொதுச்செயலாளர் பதவியை நெருங்கியிருக்கும் எடப்பாடி பழனிச்சாமிக்கு முட்டுக்கட்டை போட பல்வேறு திசைகளிலும் ஓ.பி.எஸ் […]
- ஓ.பி.எஸ் சுயநலத்துக்காக சாதியை பயன்படுத்துகிறார்..,
திருச்சி குமார் குற்றச்சாட்டு..!ஓ.பி.எஸ் சுயநலத்திற்காக சாதியைப் பயன்படுத்துகிறார் என இ.பி.எஸ்ஸின் தீவிர ஆதரவாளரும், திருச்சி புறநகர் மேற்கு மாவட்ட […] - இபிஎஸ் ஐ முந்திய ஓபிஎஸ்..மு.க.ஸ்டாலினை முந்திய கமல்ட்விட்டர் கணக்கு வைத்துள்ள தமிழக அரசியல் தலைவர்களில் யார் யாரை முந்துகின்றனர் என்றதகவல் வெளியாகிஉள்ளது.ட்விட்டரில் அதிக […]
- மீனை காப்பாற்றிய நாய் – வைரல் வீடியோமீன்களை நாய் ஒன்று காப்பாற்றியவீடியோ தற்போது வைரலாகி உள்ளது. வழக்கமாக மீன்களை விரும்பி உண்ணுவது நாய்களின் […]
- பாஜகவில் இணைவாரா ஓபிஎஸ் -காவித்துண்டு போர்த்தியதால் பரபரப்புஅதிமுக தொண்டர்களை பாஜகவுக்கு செல்லமாட்டார்கள் என்று ஓபிஎஸ் குறித்து செல்லூர் கே.ராஜூ விமர்சித்தார். அதே நேரத்தில் […]
- பொதுக்குழுவுக்கு நடத்துவதில் சிக்கல் – இபிஎஸ் அதிர்ச்சிஅதிமுக பொதுக்குழுவை நடத்த பள்ளி,கல்லூரிகளில் அனுமதி கிடையாத என்பதால் இபிஎஸ் தரப்பு அதிர்ச்சியடைந்துள்ளது.கடந்த ஜூன் 23ம் […]
- ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆக வேண்டும் என்ற ஆசை – அண்ணாமலைதமிழக முதல்வர் ஸ்டாலினுக்கு பிரதமர் மோடி போல ஆகவேண்டும் என ஆசை இருக்கிறது என அண்ணாமலை […]
- வலிமைமிக்க தலைவர் எடப்பாடி பழனிசாமி -விஜயபாஸ்கர் பேட்டி“வலிமை மிக்க ஒற்றை தலைமைக்கு ஏற்றவராக எடப்பாடி பழனிசாமி இருக்கிறார். இதனையே அனைவரும் விரும்புகின்றனர்” என்று, […]
- காளையார்கோவில் அருகேதொல்லியல் ஆய்வில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள்காளையார்கோவில் அருகே கொல்லங்குடி பகுதியில் கண்டெடுக்கப்பட்ட தங்க பொருள்கள் தொல்லியல் துறையினரிடம் ஒப்படைப்பு.சிவகங்கை மாவட்டம் களையார்கோவில் […]
- புதுச்சேரி அதிமுக அலுவலகத்தில் இருந்த ஓபிஎஸ் படத்தை கிழித்த நிர்வாகிகள்திமுகவின் பி-டீம் ஆக செயல்படும் ஓபிஎஸ், வைத்தியலிங்கம், மனோஜ் பாண்டியன் உள்ளிட்டோரை அதிமுகவிலிருந்து நீக்க வேண்டும் […]
- அதிமுக ஒருங்கிணைப்பாளரர் ஓ.பன்னீர்செல்வத்தை அவமானப்படுத்தியதை கண்டித்து மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம்..,அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்ச்செல்வம் அவமானப்படுத்தப்பட்டதை கண்டித்து ராஜபாளையத்தில் மறவர் மகாஜனசபையின் சார்பில் மாபெரும் தர்ணா போராட்டம் […]
- அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பேருக்கு கொரோனா…சமீபத்தில் நடந்த அதிமுக பொதுக்கூட்டத்தில் கலந்துகொண்ட 3 பிரபலங்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு […]
- வரலாற்றுச்சிறப்பு மிக்க கடலூரில் டாக்டர் அழகுராஜா ஆய்வுஇந்தியாவின் நிர்வாக தலைநகராக விளங்கிய கடலூரில் ஆய்வாளர் டாக்டர் அழகுராஜா ஆய்வுகடலூர்மத்திய சிறைச்சாலை, 177 ஏக்கர் […]
- பாக்ஸ் ஆபிஸ் ஹிட் லிஸ்ட்டில் இணைந்த கோலிவுட்டின் ‘விக்ரம்’…!பாக்ஸ் ஆபிஸ் ஹிட் என்று கூறினாலே அது பாலிவுட் படங்கள்தான் என்ற நிலையை தென்னிந்திய படங்கள்தான் […]