நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல் முகாமில் உள்ள அரசு தொடக்கப் பள்ளிக்கு தமிழக அரசின் சிறந்த பள்ளிக்கான விருது வழங்கப்பட்டது
நீலகிரி மாவட்டம் மஞ்சூர் மின்வாரிய மேல்முகம் அரசு தொடக்கப்பள்ளி செயல்பட்டு வருகிறது எல்கேஜி முதல் ஐந்தாம் வகுப்பு வரை உள்ள பள்ளியில் மஞ்சூர் சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஏழு தேயிலைத் தோட்ட தொழிலாளர்கள் விவசாயிகள் குழந்தைகள் படிக்கின்றனர். கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு வரை பத்துக்கும் குறைவான மாணவர்கள் படித்து வந்த நிலையில் தலைமையாசிரியர் ஜெயந்தி மற்றும் பள்ளி ஆசிரியர்கள் தீவிர முயற்சியால் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து தற்போது பள்ளியில் 140 மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர்.
போதிய வகுப்பறைகள் இல்லாததால் மாணவர்களுக்கு கல்வி கற்பதில் இடையூறு ஏற்பட்டு வந்தது தொடர்ந்து இந்திய கம்யூனிஸ்ட் மாநிலங்கள் உறுப்பினர் ரங்கராஜன் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டது இதைத்தொடர்ந்து அவர் தனது தொகுதி மேம்பாட்டு நிதியின் மூலம் 15 லட்சம் ஒதுக்கினார் இதன் மூலம் இரண்டு கூடுதல் வகுப்பறைகள் கட்டப்பட்டது இதேபோல கழிப்பிட வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டது.
தொலைதூரப் பகுதிகளில் இருந்து பள்ளிக்கு வரும் மாணவர்களுக்காக அனைவருக்கும் கல்வி திட்டத்தின் மூலம் வாகன வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.



சீருடை துவங்கி கல்வி கற்பது வரை தனியார் பள்ளிகளை பின்னுக்கு தள்ளி தான் பெரும்பலனான பெற்றோர்களுக்கு தங்களது குழந்தைகளை அரசு பள்ளிகளை சேர்த்துள்ளனர். இந்த நிலையில் மேற்படி மாணவர் சேர்க்கை சிறந்த கல்வி கற்பித்தல் மாணவர் நலன் போனதால் உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் 2020 -21 ஆண்டுக்கான தமிழக அரசு சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருதுக்கு மின்வாரிய மேல் முகாம் அரசு தொடக்கப்பள்ளி தேர்வு செய்யப்பட்டது. இதை தொடர்ந்து நேற்று சென்னையில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலக ஆடிட்டோரியத்தில் நடந்த விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு தமிழக அரசின் சிறந்த தொடக்கப் பள்ளிக்கான விருதை வழங்கினார். இந்த விருதை பள்ளி தலைமை ஆசிரியர் ஜெயந்தி மற்றும் ஆசிரியை சபிதா வட்ட கல்வி அலுவலர் வனிதா ஆகியோர் அமைச்சரிடம் இருந்து பெற்றுக் கொண்டார்கள். சிறந்த பள்ளிக்கான விருது பெற்ற தலைமை ஆசிரியை ஜெயந்தி மற்றும் ஆசிரியர்களை பெற்றோர்கள் ஆசிரியர் கழகத்தின் மற்றும் பொதுமக்கள் மின்வாரியத்தினர் பாராட்டுக்கள் தெரிவித்து வருகின்றனர்.
- மதுரை அரசரடி நீர்தேக்கத்தொட்டி முறையற்ற வகையில் பராமரிப்பு- பொதுமக்கள் அதிருப்திகுடிநீர் விநியோகத்திற்கு பயன்படுத்தப்படும் நீர் பாதுகாப்பற்ற முறையில் இருப்பதை சரியாக பாராமரிக்க வேண்டும் மதுரை அரசரடி […]
- மஞ்சூரில் மாற்றுத்திறனாளிகளுக்கு சிறப்பு முகாம்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் பகுதியில் குந்தா தாலுகாவிற்கு உட்பட்ட மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு முகம் மஞ்சூர் […]
- சிறப்பு அலங்காரத்தில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானைதிருப்பரங்குன்றம் அருள் மிகு சுப்பிரமணியசுவாமிகோயிலில் சுப்பிரமணிய சுவாமி தெய்வானை அலங்காரத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள் பாலித்தார்.மதுரை […]
- தொழிற்சாலை ஊழியர்களை மிரட்டும் வன விலங்குகள்நீலகிரி மாவட்டம் மஞ்சூர் சுற்று வட்டார பகுதிகளில் இரவு நேரங்களில் வனவிலங்குகளின் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் தேயிலை […]
- ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்பெருந்தலைவர் காமராஜர் அவர்களை அவதூறாக பேசிய திமுகவின் ஆ ராசாவை கண்டித்து தமிழ்நாடு நாடார் பேரவை […]
- முதுமலை பகுதியில் புதிய பாலம் கட்டும் பணியினை உடனே துவங்க கோரிக்கைமுதுமலை புலிகள் காப்பகம் அருகே பழங்குடியினர் மற்றும் வளர்ப்பு யானைகள் நடக்க உதவும் வகையில் புதிய […]
- வாடிப்பட்டியில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம்வாடிப்பட்டியில் தமிழ்நாடு அரசின் கால்நடை பராமரிப்பு துறை சார்பில் வெறி நோய் தடுப்பு விழிப்புணர்வு முகாம் […]
- வாடிப்பட்டியில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம்வாடிப்பட்டியில் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி சார்பில் மாற்றுத்திறனாளிகளுக்கு மருத்துவ சான்று வழங்க மதிப்பீட்டு முகாம் நடைபெற்றதுமதுரை வாடிப்பட்டி […]
- ராமேஷ்வரம் கடலில் வீசப்பட்ட தங்ககட்டிகளை தேடும் நீர்மூழ்கி வீரர்கள்இலங்கையிலிருந்து- ராமேஷ்வரம் வழியாக தங்ககட்டிகள் கடத்தி வந்து போலீசார் சுற்றி வளைத்ததால் கடலில் வீசியதாகவும் அதனை […]
- இலக்கியம்நற்றிணைப் பாடல் 111: அத்த இருப்பைப் பூவின் அன்னதுய்த் தலை இறவொடு தொகை மீன் பெறீஇயர்வரி […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள்நம்மிடம் 1 ரூபாய் பிச்சை கேட்பவர்களிடம் கை, கால் நல்லா தானே இருக்கு உழைத்து சாப்பிடு […]
- ஜஸ்டின் பேத்தி நாயகியாக அறிமுகமாகும் அஞ்சி நடுங்கிடஃபிளை டார்ட் ஸ்டுடியோஸ் (FLY DART STUDIOS) நிறுவனம் தயாரிக்கும் ‘அஞ்சி நடுங்கிட’ எனும் புதிய […]
- ஆயிரம் ஆண்டு பழைமையான தட்சிணாமூர்த்தி சிலை கண்டுபிடிப்பு..!விழுப்புரம் மாவட்டத்தில் வரலாற்றுச் சிறப்பு வாய்ந்த கிராமமாகக் கருதப்படும் எண்ணாயிரம் கிராமத்தில், ஆயிரம் ஆண்டுகள் பழைமையான […]
- பொது அறிவு வினா விடைகள்
- குறள் 376பரியினும் ஆகாவாம் பாலல்ல உய்த்துச்சொரியினும் போகா தம. பொருள் (மு.வ): ஊழால் தமக்கு உரியவை அல்லாதப் […]