நீலகிரி மாவட்டம் கூடலூர் வனச்சரகத்திற்கு உட்பட்ட கரளிகண்டி வனப்பகுதியில் கூடலூர் உதவி வன பாதுகாவலர் தலைமையில் கூடலூர் வனச்சரக பணியாளர்கள் ,பந்தலூர் வனச்சரக பணியாளர்கள் ,நாடு காணி வனச்சரக பணியாளர்கள் மற்றும் வன உயிரின கால்நடை மருத்துவ குழுவினருடன், PM 2 மக்னா யானையின் கால் தடத்தை வைத்தும் டிரோன் கேமரா மூலம் யானையை தேடும் பணியில் ஈடுபட்டது.
தற்போது யானை முண்டக்கொல்லி வனப்பகுதிக்குள் யானை தென்பட்டுள்ளது.
இதனையடுத்து இந்த யானை இரவு நேரத்தில் வாச்சிக்கொல்லி , புளியம்பாறை, மரம்பிலா கோல்கேட், கோழிப் பாலம் பகுதிகளுக்கு வர வாய்ப்புள்ளது.
எனவே அப்பகுதிகளை சேர்ந்த மக்கள் கவனமாக இருக்கவும் என வனத்துறை எச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.