• Mon. Apr 29th, 2024

இந்தியா ராணுவ முகாம் மீது தற்கொலைப் படை தாக்குதல்…

Byகாயத்ரி

Aug 11, 2022

ஜம்மு காஷ்மீர் மாநிலம், ரஜோரி மாவட்டத்திலிருந்து 25 கிமீ., தொலைவில் உள்ள ராணுவ முகாம் மீது பயங்கரவாதிகள் தற்கொலைப் படை தாக்குதல் நடத்தியுள்ளனர். இந்த தாக்குதலில் 3 ராணுவ வீரர்கள் உயிர்த்தியாகம் செய்துள்ளனர். வீரர்கள் பலர் காயமடைந்துள்ளனர். அதேநேரம், இந்த தாக்குதலை நடத்திய இரண்டு பயங்கரவாதிகளும் உயிரிழந்துள்ளனர். இதன் பின்னணி குறித்த தேடுதல் வேட்டை தொடர்வதாக ராணுவம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *