புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே பாப்பான்விடுதி கிராமத்தைச் சேர்ந்தவர் நாடிமுத்து. லாரி ஓட்டுநரான இவருக்கு போதினி என்ற மனைவியும் கிருஷ்ணவேணி என்ற மகளும், நிதிஷ்குமார் என்ற மகனும் உள்ளனர்.
இவரது மகள் கிருஷ்ணவேணி பாப்பான்விடுதியில் உள்ள அரசு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பள்ளியில் ஐந்தாம் வகுப்பு படித்து வருகிறார். 9 வயதான நிதிஷ்குமார் அதே பள்ளியில் நான்காம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் வழக்கம்போல் நேற்று பள்ளிக்கு வந்த மாணவன் நிதிஷ்குமாருக்கு நேற்று மாலை வகுப்பறையில் இருந்த போது திடீரென மயக்கம் மற்றும் உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது. இதனை பார்த்த அந்த பள்ளியின் வகுப்பறை ஆசிரியர் ஆரோக்கியம் உடனடியாக மாணவனை அழைத்துக் கொண்டு போய் அவர் வீட்டில் விட்டுள்ளார்.
வீட்டில் நிதிஷ்குமாரின் பாட்டி மட்டுமே இருந்துள்ளார். அவரது தாய் மற்றும் தந்தை பணிக்காக சென்றுள்ளனர். இதனையடுத்து நிதிஷ் குமாரின் தந்தை நாடிமுத்துவுக்கு செல்போன் மூலம் ஆசிரியர் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்துள்ளார். இதனையடுத்து அந்த மாணவனை அவரது பாட்டி மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக ஆலங்குடியில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
அங்கு முதலுதவி சிகிச்சை அளித்த தனியார் மருத்துவமனை மருத்துவர் உடனடியாக மேல்சிகிச்சைக்காக புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளார். ஆனால் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்றபோதே அந்த மாணவன் உயிரிழந்துள்ளார்.
மாணவனின் உயிர் இழப்புக்கான காரணம் தெரியாத நிலையில் தற்போது மாணவனின் உடல் புதுக்கோட்டை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள பிரேத பரிசோதனை கூடத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இதனிடையே அந்த மாணவனின் உயிரிழப்புக்கு காரணம் கேட்டு அக்கிராம மக்கள் அந்த பள்ளியில் குவிந்து நேற்று மாலை விளக்கம் கேட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனையடுத்து அங்கு வந்த ஆலங்குடி போலீசார் பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தி விசாரணை மேற்கொண்டு விளக்கம் அளிப்பதாக வாக்குறுதி அளித்தனர்.
இதனால் மக்கள் அங்கிருந்து கலைந்து சென்ற நிலையில் நேற்று இரவு 7.30 மணி அளவில் அந்த பள்ளி வளாகத்தில் ஒரு நல்ல பாம்பு சுற்றி திரிவதை பார்த்த அக்கிராம மக்கள் அதனை அடித்துள்ளனர். பள்ளி வளாகத்தில் பாம்பு அடிக்கப்பட்ட சம்பவம் பெரும் குழப்பத்தை ஏற்படுத்திருந்தது.
மேலும் பள்ளிக்கு வீட்டிலிருந்து நன்றாக வந்த மாணவன் உடல் நலக்குறைவு ஏற்பட்டு உயிர் இழந்த சம்பவம் தங்களுக்கு சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாகவும் மாணவனின் உயிரிழப்புக்கு முறையான காரணத்தை பள்ளி நிர்வாகமும் மருத்துவர்களும் தெரிவிக்க வேண்டுமெனவும் மாணவனின் தந்தை நாடிமுத்து ஆலங்குடி காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார்.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]