தமிழகம் முழுவதும் கொரோனா பரவல் அதிகரிப்பின் போது, அதற்கான தடுப்பு நடவடிக்கையாக தளர்வில்லா முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனைத்தொடர்ந்து, காய்கறி-மளிகை கடைகள் உள்பட அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இந்நிலையில், பொதுமக்கள் நலனுக்காக தமிழகம் முழுவதும் குடியிருப்பு பகுதிகள் நோக்கி அரசு அனுமதி பெற்ற நடமாடும் காய்கறி கடைகள் மட்டும் அனுமதிக்கப்பட்டது!

அதன்படி குடியிருப்பு பகுதிகள் நோக்கி வரும் மளிகை கடை வாகனங்களில் மஞ்சள், உப்பு, சர்க்கரை, பொன்னி அரிசி, இட்லி அரிசி, துவரம் பருப்பு, கடலை பருப்பு, பாசி பருப்பு, உளுந்தம் பருப்பு, மிளகாய் வத்தல், உள்ளிட்ட மளிகை பொருட்கள் அனைத்தும் விற்பனை செய்யப்பட்டது. தற்போது, ஊரடங்கு தளர்த்தப்பட்டதால் மக்கள் நேரடியாகவே மளிகை கடைக்கும், சந்தைகளுக்கும் சென்று காய்கறிகளையும், மளிகை பொருட்களையும் வாங்கி வருகின்றனர்.

அந்த வகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் இளைஞர் ஒருவர், குறைந்த விலையில் நிறைவான லாபத்தை பெற்று மக்களுக்கு உதவி செய்து வருகிறார். புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி கூத்தாடி வயல் பகுதியை சேர்ந்தவர் சரவணன். இவர் சில வருடமாக தனது இருசக்கர வாகனத்தில் அறந்தாங்கி மற்றும் அதனை சுற்றியுள்ள ஆவுடையார்கோவில், மணமேல்குடி, நாகுடி உள்ளிட்ட கிராமங்களுக்கு சென்று வீட்டிற்குத் தேவையான மளிகைப் பொருட்களை ரூ.10-க்கு விற்பனை செய்து வருகிறார்.

இருசக்கர வாகனம் முழுவதும் ஒரு மளிகை கடைக்கு தேவையான அனைத்து பொருட்களும் இருக்கின்றன. சிறிய ரேடியோவில் வாங்கம்மா வாங்க உங்க வீடு தேடி வந்திருக்கோம். ரூ.10 -க்கு மளிகை பொருட்கள் கிடைக்கும் என்று ஒலிக்க மக்களும் வீட்டுக்கு தேவையான பொருட்களை வீட்டு வாசலுக்கே வந்து வாங்கி செல்கின்றனர். அவரிடம் மளிகை பொருட்கள், குழந்தைகளுக்கு தேவையான விளையாட்டு பொருட்கள், அலங்காரப் பொருட்களும் உள்ளன.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், “விலை குறைவாக இருந்தாலும் பொருட்கள் தரமாக கொடுத்து வருகிறேன். தேவைக்கு ஏற்ப பொருட்களை வாங்கி சென்று, நேரடியாக வீட்டுக்கே செல்வதால் வாடிக்கையாளர்கள் ஆர்வத்துடன் வாங்குகின்றனர். காலையில் ஏழு மணிக்கு கிளம்பி அனைத்து பகுதிகளுக்கும் சுற்றிவிட்டு வீட்டுக்கு வர 7 மணி ஆகிடும். ஒரு நாளுக்கு ரூ.1000 வரை வியாபாரம் நடக்கும். செலவு போக ஒரு பொருளுக்கு ரூ.300 கிடைக்கும்” என்று அவர் தெரிவித்தார்.
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]
- சசிகலாவுடன்- நடிகை விஜயசாந்தி ரகசிய சந்திப்புநடிகையும்,பாஜக முன்னாள் எம்.பியுமான விஜயசாந்தி -சசிகலாவை ரகசியமாக சந்தித்து பேசியதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.அ.தி.மு.க.க்கு தான் தலைமை […]
- சிந்தனைத் துளிகள்• வாழ்க்கை ஒரு சங்கீதம். அது செவிகளாலும், புலன்களாலும், உணர்வுகளாலும் உருவாக்கப்பட வேண்டுமே அல்லாமல் சட்ட […]
- அண்ணாமலை மன்னிப்பு கேட்க வேண்டும்பத்திரிகையாளர்களிடம் தொடர்ந்து அநாகரிகமாக நடந்து கொள்வதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலைக்கு பல்வேறு அமைப்பினர் கண்டனம் […]
- பாமக தலைவராக அறிவிக்கப்படுகிறார் அன்புமணிசென்னை அடுத்த திருவேற்காட்டில் இன்று நடக்கும் பாமக சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் கட்சியின் தலைவராக அன்புமணி […]
- குரங்கு காய்ச்சல் அதிக அளவில் பாதிப்பை ஏற்படுத்தும்…லண்டன், இங்கிலாந்து, ஸ்பெயின், போர்ச்சுக்கல், கனடா மற்றும் அமெரிக்கா உள்ளிட்ட 20 நாடுகளில் ஏறத்தாழ 200 […]
- வெளியானது நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணத் தேதி…நயன்தாரா -விக்னேஷ் சிவன் திருமணம் எப்போது நடைபெறும் என்று ரசிகர்கள் அனைவரும் நீண்ட நாட்களாக எதிர்பார்ப்பில் […]
- அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் ஆர்ப்பாட்டம்சிறுபான்மை மக்கள் நல கட்சி அனைத்து கிறிஸ்துவ மக்கள் களம் சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி […]
- ஹெல்மெட் அணிந்துவரும் வாகன ஓட்டிகளுக்கு பரிசுதலைக்கவசத்தின் அவசியத்தை வலியுறுத்தும் வகையில் ஹெல்மெட் அணிந்து வரும் வாகன ஒட்டிகளுக்கு தொப்பி, கூல்டிரிங்க்ஸ் வழங்கிய […]
- புதுமண்டபத்தில் உள்ள கடைகளை அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள்மதுரை புது மண்டபத்தில் உள்ள கடைகளில் பொருட்களை காவல்துறை பாதுகாப்புடன் அப்புறப்படுத்தும் கோயில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.உலகப் […]
- மதுரை – தேனி விரைவு ரயிலுக்கு அமோக வரவேற்பு- கூடுதல் ரயில்களை இயக்க கோரிக்கைமதுரை தேனி விரைவு சிறப்பு ரயிலில் நேற்று முதல் இயக்கப்பட்டதில் 574 பேர் பயணம் கொண்டதில் […]
- காட்டுயானை தாக்கி டீக்கடைக்காரர் பலி!கூடலூர் தாலுகா ஓவேலி பேரூராட்சி ஆரோட்டுப்பாறை திருவள்ளுவர் நகரை சேர்ந்தவர் தருமலிங்கம். இவரது மகன் ஆனந்தகுமார்(வயது […]
- இன்று கருணாநிதி சிலையை-வெங்கையாநாயுடு திறந்து வைக்கிறார்சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் முன்னாள் முதல்வர் கருணாநிதி சிலை இன்று திறப்புசென்னை ஓமந்தூரார் அரசினர் […]