அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் திருமண மண்டபத்தில் தொடங்கியது. ஒரே மேடையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி உள்ள நிலையில் பொதுக்குழு கூட்டம் கூடியது.அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தமிழ் மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக மேடையில் இபிஎஸ் பேசிக்கொண்டிருந்தார். அப்போது மேடையில் பேசிக்கொண்டிருக்கும் போது மாவட்ட செயலாளர் ஒருவர் மிகப்பெரிய மாலையை அணிவிக்க வந்தார். அப்போது கடும் கோபமாக இருங்கப்பா!.பொறுங்கப்பா!..சும்மா…!!! தனது கடுப்பை வெளிப்படுத்தினார்.