அ.தி.மு.க. பொதுக்குழு கூட்டம் சென்னை வானகரத்தில் தொடங்கியது நடைபெற்றுவருகிறது .இந்நிலையில் ஜூலை
11ல் மீண்டும் கூடுகிறது அதிமுக பொதுக்குழு கூட்டம் என அவைத்தலைவர் அறிவிப்பு .
கூட்டம் துவங்கியது முதல் இபிஎஸ் ஆதரவாளர்கள் ஓபிஎஸ்க்கு எதிராக கோஷம் எழுப்பிய வண்ணம் இருந்தனர். இதனால் கோபமடைந்த ஓபிஎஸ் சட்டத்திற்கு புறப்பான பொதுக்குழு என முழக்கமிட்டு பொதுக்குழுவை புறக்கணித்து வெளியேறினார்.
அதிமுக பொதுக்குழு கூட்டத்தில் தற்காலிக அவைத்தலைவராக தேர்வு செய்யப்பட்ட தமிழ் மகன் உசேன் உரையாற்றினார். அப்போது பேசிய அவர், பொதுக்குழு உறுப்பினர்கள் கோரிக்கையை ஏற்று அதிமுக பொதுக்குழு கூட்டம் வரும் ஜூலை 11-ம் தேதி காலை 9.15 மணிக்கு நடைபெறும் என்று அவைத்தலைவர் தமிழ் மகன் உசேன் அறிவித்துள்ளார்.