திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலில் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.முருகப்பெருமுõனின் முதல்படை வீடு எனும் சிறப்பு பெற்ற திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஐப்பசி மாதம் கார்த்திகை முன்னிட்டு சிறப்பு அபிஷேகம் மற்றும்அலங்காரமும் நடைபெற்றது.
அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோவில் திருப்பரங்குன்றம் இன்று ஐப்பசி மாதம் கார்த்திகை முன்னிட்டு சுப்பிரமணிய சுவாமி. தெய்வயானை திருவாச்சி மண்டபத்தில் எழுந்தருளி சிறப்பு அபிஷேகம் அலங்காரம் நடைபெற்று தங்க மயில்வாகனத்தில் புறப்பாடாகி எழுந்தருளி பக்தர்களுக்கு சுப்பிரமணியசாமி. தெய்வயானை அருள் புரிந்தனர்.