• Mon. Aug 10th, 2026
WhatsAppImage2026-08-06at2018242
previous arrow
next arrow
Read Now

திறனறி விழா..,

ByK Kaliraj

Aug 10, 2026

சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியின், வணிகவியல் துறை சார்பில் திறனறி விழா கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது. நிகழ்வின் தொடக்கமாக, இளங்கலை மூன்றாமாண்டு வணிகவியல் மாணவி தேன்மொழி வரவேற்புரை வழங்கினார்.

இந்நிகழ்ச்சியின் குறிப்பிடத்தக்க சிறப்பம்சமாக, வணிகவியல் துறை ஆசிரியர்களின் பங்களிப்பில் உருவாக்கப்பட்ட இரண்டு கல்விசார் நூல்கள் வெளியிடப்பட்டன. “Dictionary of Commerce & Accountancy” என்ற நூலை கிருத்திகா, மதிவதனா, அழகுலட்சுமி, குருசாமி கீதா ஆகியோர் எழுதியிருந்தனர். மேலும், “Indirect Taxation” என்ற நூலை கிருத்திகா, அழகுலட்சுமி, பமதிவதனா, முனைவர் அ.பாபு பிராங்க்ளின் மற்றும் முனைவர் இரா.கீதா ஆகியோர் எழுதியிருந்தனர். இந்நூல் வெளியீடு, கல்வி மேம்பாடு, அறிவு உருவாக்கம் மற்றும் ஆய்வுசார் பங்களிப்பில் துறையின் அர்ப்பணிப்பை வெளிப்படுத்தியது.

இந்நிகழ்விற்கு கல்லூரி முதல்வர்.பாலமுருகன் தலைமை தாங்கினார். அவர்தம் உரையில், மாணவர்கள் தங்களின் திறன்களைக் கண்டறிந்து, தங்களது ஒட்டுமொத்த ஆளுமையை மேம்படுத்திக் கொள்வதற்கு கல்லூரியில் கிடைக்கும் வாய்ப்புகளைச் சிறப்பாகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் மாணவர்களின் கல்வி மற்றும் கல்விசாரா வளர்ச்சியை மேம்படுத்துவதற்காக வணிகவியல் துறை மேற்கொண்ட முயற்சிகளில் மாணவர்கள் பங்கேற்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.

தொடர்ந்து வாழ்த்துரை வழங்கிப் பேசிய துறைத் தலைவர் குருசாமி, மாணவர்கள் பல்வேறு செயல்பாடுகளில் ஆர்வத்துடன் பங்கேற்க வேண்டும் என்றும் கல்வி மற்றும் தொழில்சார் வெற்றியை அடைவதில் திறமை, படைப்பாற்றல், குழுப்பணி மற்றும் தன்னம்பிக்கை ஆகியவற்றின் முக்கியத்துவத்தை மாணவர்கள் உணர வேண்டும் என்றும் குறிப்பிட்டார்.

இந்நிகழ்ச்சியில் மொத்தம் 210 மாணவர்கள் கலந்து கொண்டனர். இளங்கலை முதலாமாண்டு வணிகவியல் மாணவர் இளங்கோ நன்றியுரை வழங்கினார். மூன்றாம் ஆண்டு பி.காம். மாணவிகளான ஜோஷினா, அட்சயா ஸ்ரீ மற்றும் கீர்த்தனா ஸ்ரீ ஆகியோர் நிகழ்ச்சித் தொகுப்பாளர்களாகச் செயல்பட்டனர். வணிகவியல் உதவிப் பேராசிரியர் குலோத்துங்கபாண்டியன் இந்நிகழ்ச்சிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் மேற்கொண்டார்.