கொடைக்கானல் தாலுகா கும்பரையூர் அடுத்துள்ள, சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயிலில் மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் தாலுகா, கும்பரையூர் அடுத்துள்ள சீமை பூலத்தூரில் ஸ்ரீ வெள்ளிமலை வெங்கல நாதர் சிவன் கோயில் உள்ளது. இங்கு சன்னதிகளில் வீற்றிருக்கும் பரிவார மூர்த்திகளுக்கு நேற்று (பிப். 20) அஷ்டபந்தன மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடைபெற்றது. இதை முன்னிட்டு, பிப். 16ம் தேதி புதன்கிழமை கிராம தேவதைகள் வழிபாடு நடந்தது. மறுநாள் காலை 8 மணிக்கு கணபதி ஹோமத்துடன் கும்பாபிஷேகத்திற்கான சிறப்பு பூஜைகள் துவங்கின. பிப்.18ம் தேதி காலை 9 மணிக்கு கைலாச வாத்தியங்கள் முழங்க, நாதஸ்வர மேள தாளத்துடன் வான வேடிக்கை நடந்தது. தொடர்ந்து பல புண்ணிய தீர்த்தங்களுடன், கோடி தீர்த்தம் மற்றும் முளைப்பாரியுடன் மண்டுப்பாறையில் இருந்து புறப்பட்டு, சிவன் கோயில் யாகசாலை வந்தடைந்தது. அன்று மாலை 6 மணிக்கு மேல் முதல் கால யாகபூஜை துவங்கியது. பிப்.19ம் தேதி காலை 8 மணிக்கு மேல் இரண்டாம் கால யாக பூஜையும், மாலை 5 மணிக்கு மூன்றாம் கால யாக பூஜையும் நடந்தது. நேற்று (பிப். 20) காலை 8.10 மணிக்கு வேத விற்பன்னர்கள் மந்திரங்கள் முழங்க, கடம் புறப்பாடு நடந்தது. காலை 9 மணிக்கு மேல் கோபுர கலசத்தில் புனித நீர் ஊற்றப்பட்டு, மகா கும்பாபிஷேகம் நடந்தது. அதனை தொடர்ந்து மூல ஆலயம் மற்றும் பரிவார மூர்த்திகளுக்கும் கும்பாபிஷேகம் நடந்தது. பின்னர் திருப்பதியான் (எ) கோதண்டராமர் கோயில் அன்னதான கூடத்தில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. முன்னதாக, சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட, தேனி அருகே போடி பகுதியில் வசிக்கும் எஜமான் பாண்டி முனீஸ்வரர் என்ற சிவபக்தர் பக்தர்களுக்கு அருளாசி வழங்கினார். பூலத்தூர் மட்டுமின்றி அதனை சுற்றியுள்ள மலை கிராமத்தை சேர்ந்த ஏராளமான மக்கள் வந்திருந்து கும்பாபிஷேக நிகழ்ச்சியை கண்டு களித்தனர். இதற்கான ஏற்பாடுகளை கோயில் திருப்பணிக் குழுவினர் செய்திருந்தனர்.

- மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் குறைதீர்ப்பு முகாம்மதுரை மாநகராட்சி மண்டலம் 4 அலுவலகத்தில் பொதுமக்கள் குறைதீர்ப்பு முகாம் மேயர் தலைமையில் நடைபெற்றதுமதுரை மாநகராட்சி […]
- அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் ஆர்ப்பாட்டம்13 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து ஊழியர் சம்மேளனம் சார்பில் மண்டல அலுவலகம் முன்பாக […]
- நுழைவு தேர்வு இல்லாமல் சென்னை ஐஐடியில் சேரலாம்எந்தவொரு நுழைவுத் தேர்வும் இல்லாமல் சென்னை ஐஐடியில் சேர அற்புதமான ஒரு வாய்ப்பு இருக்கிறது.இந்தியளவில் டாப் […]
- ஆளுநர் ஆர்.என்.ரவியின் பேச்சுக்கு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!அத்துமீறி பேசுவதையே வாடிக்கையாக வைத்துள்ளார் ஆளுநர்”நிதியமைச்சர் தங்கம் தென்னரசு கண்டனம்!கல்வியில் சிறந்து விளங்கும் தமிழ்நாட்டை அறிந்தும் […]
- திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகம் முற்றுகைமதுரை மாவட்டம் திருமங்கலம் காவல் துணைக் கண்காணிப்பாளர் அலுவலகத்தை 200க்கும் மேற்பட்ட கிராம மக்கள் முற்றுகை- […]
- பாரதி கணேஷ் 24 வருடங்கள் கழித்து இயக்கும் குழந்தைகள் படம்விஜயகாந்த், சிம்ரன், கரண் நடித்த ‘கண்ணுபட போகுதய்யா’ படத்தை இயக்கியவர் பாரதி கணேஷ். 1999ம் ஆண்டு […]
- ஆஞ்சநேயருக்கு டிக்கட் முன்பதிவு செய்த ஆதிபுருஷ் படக்குழுராமாயண கதையின் ஒரு பகுதியை மையமாக வைத்து ஓம் ராவத் இயக்கியுள்ள திரைப்படம் ‘ஆதிபுருஷ்’ . […]
- விருதுநகர் அருகே சாலை விபத்து … நிதி நிறுவன ஊழியர்கள் 2 பேர் பலிவிருதுநகருக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுவிட்டு திரும்பி வந்து கொண்டிருந்த நிதிநிறுவன ஊழியர்கள் விபத்தில் சிக்கி பலியானார்கள்.விருதுநகர் […]
- ராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடம் திறப்புராஜபாளையத்தில் போக்குவரத்து காவல் நிலைய புதிய கட்டிடத்தை காணொளி காட்சி மூலமாக காவல்துறை தலைமை இயக்குனர் […]
- இந்தியாவின் முதல் தபால்காரர் பற்றிய படம் ஹர்காராகலர்புல் பீட்டா மூவ்மென்ட் என்ற நிறுவனத்தின் தயாரிப்பில், உருவாகும் படம் ‘ஹர்காரா’. ‘வி1 மர்டர் கேஸ்’ […]
- விஐய் 68 படத்தின் பெயர் என்ன?விஜய் தற்போது லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் லியோ படத்தில் நடித்து வருகிறார். இப்படத்தை தொடர்ந்து வெங்கட் […]
- தமிழகத்தில் தொடர்ந்து உயரும் அரிசி விலை : அதிர்ச்சியில் மக்கள்..!தமிழகத்தில் இந்த மாதத் தொடக்கத்தில் இருந்து அரிசி விலை உயர்ந்து வருவதால் மக்கள் அதிர்ச்சியில் உறைந்து […]
- சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் அறிமுகம்..!சென்னை – இலங்கை இடையே பயணிகள் சொகுசு கப்பல் நேற்று அறிமுகமாகி உள்ளது.மத்திய அரசின் சாகர்மாலா […]
- திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டு..!திருமண நிச்சயதார்த்த விழாவில் பாயசத்துக்கு மல்லுக்கட்டி ஒருவருக்கொருவர் ரகளையில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.இது தொடர்பாகச் […]
- பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியீடு..!தமிழகத்தில் பொறியியல் படிப்பிற்கான ரேண்டம் எண் வெளியிடப்பட்டுள்ளது.தமிழகத்தில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் 460-க்கும் மேற்பட்ட என்ஜினீயரிங் […]