இந்திய சுதந்திர போராட்ட தியாகி, செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன் வ.உ.சி 150-வது பிறந்தநாள் இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டது .
சேலம் மாநகரம் கிச்சிப்பாளையத்தில் வ.உ.சி திருவுருச்சிலைக்கு, நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.ஆர்.பார்த்திபன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இந்நிகழ்ச்சியில், பனமரத்துப்பட்டி ஒன்றிய துணை செயலாளர் ராஜா, மாநகர சிறுபான்மை அமைப்பாளர் விக்டர், சமூக சேவகி தேவிகா மற்றும் பேச்சாளர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.