கருத் தரிப்ப்பதான அச்சமின்றி பாலுறவில் ஈடுபடுவதற்கான ஒரு வாய்ப்பை இம்மாத்திரை ஏற்படுத்தியது. இதனால் சூழ்நிலை மாற்றம் ஏற்பட்டு மனப்போக்கு, நடத்தைகள் போன்றவற்றில் மாற்றங்கள் ஏற்பட்டன.
வாய்வழியான கருத்தடை மாத்திரை கண்டறிவதற்கான தீவிர ஆராய்ச்சியில் தமது முழு நேரத்தையும் முயற்சிகளையும் செலவழித்த ஒரே விஞ்ஞானி என்ற பெருமை பெற்றார். கிரிகோரி பிங்கஸ் 250 அறிவியல் ஆய்வுக் கட்டுரைகள் எழுதியுள்ளார். “கருவளத்தை வெற்றி கொள்ளுதல்’ (Conquest of fertility) என்ற நூலையும் எழுதினார். இது 1965 ஆம் ஆண்டில் வெளிவந்தது. பிங்கஸ் தமது வாழ்நாளில் ஏராளமான அறிவியல் விருதுகளைப்பெற்றார். ஆனால் அவருக்கோ கருத்தடை மாத்திரையை உருவாக்கியதில் பங்கு கொண்ட எவருக்குமோ நோபல் பரிசு வழங்கப்படவில்லை. 1967 ஆம் ஆண்டு பாஸ்டனில் காலமான போது அவரது மரணத்தை பொதுமக்களும் பெரும்பாலான விஞ்ஞானிகளும் கண்டுகொள்ளவில்லை. அமெரிக்க உயிரியலறிஞர் கிரிகோரி குட்வின் பிங்கஸ் ஆகஸ்ட் 22, 1967ல் தனது 64வது அகவையில் பாஸ்டன் அமெரிக்காவில் இவ்வுலகை விட்டு பிரிந்தார்.
Source By: Wikipedia.
தகவல்: இரமேஷ், இயற்பியல் உதவி பேராசிரியர், நேரு நினைவு கல்லூரி, புத்தனாம்பட்டி, திருச்சி.