• Thu. Apr 25th, 2024

6-12ம் வகுப்புகள் வரும் செப்டம்பர் 1 முதல் திறப்பு – முதலமைச்சர் அறிவிப்பு

By

Aug 28, 2021

மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும் என அம்மாநில முதலமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் அறிவித்துள்ளார்.
“மத்திய பிரதேசத்தில் 6 முதல் 12 வரையிலான வகுப்புகள் வரும் செப்டம்பர் 1ந்தேதி முதல் திறக்கப்படும். அரசு மற்றும் தனியார் என அனைத்து பள்ளிகளும் 50 சதவீத மாணவர்களுடன் செயல்படும் “என கூறினார்.

9 முதல் 12 வரையிலான வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை செயல்பட்டு வந்தன. இனி, இந்த வகுப்புகள் தினமும் செயல்படும் என்றும் கூறியுள்ளார். ஒன்று முதல் 5 வரையிலான வகுப்புகளை தொடங்குவது பற்றி ஒரு வாரத்திற்கு பின்பு முடிவு செய்யப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *