• Wed. Apr 24th, 2024

பள்ளிகள் திறப்பு.. தலைமையாசிரியர்களுக்கு பறந்த அதிரடி சுற்றறிக்கை!

School

பள்ளிகள் திறப்பு குறித்து பள்ளிக்கல்வித்துறை சார்பில் தலைமையாசிரியர்கள் மற்றும் முதல்வர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. அதில்,

* வாரத்தில் 6 நாட்கள் பள்ளி வேலை நாட்கள்

*10ம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு மாணாக்கர்களுக்கு தினமும் வகுப்புகள் நடைபெறும்.

* ஒவ்வொரு வகுப்பறையிலும் 20 மாணாக்கர்கள் மட்டுமே சமூக இடைவெளியை பற்றி அமரவைக்க வேண்டும்.

* போதிய இடவசதி இல்லை எனில், 9ஆம் வகுப்புமற்றும் 11ஆம் வகுப்புமாணவர்களுக்கு சுழற்சி முறையில் வகுப்புகள் நடத்தப்பட பெறவேண்டும்.

* உயர்நிலைப் பள்ளிகளில் 9-ம் வகுப்பு மற்றும் 10-ம் வகுப்பு தினமும் செயல்படவேண்டும், போதிய இடவசதி இல்லாத பள்ளிகளில் மட்டும் 9-ம் வகுப்பு கழட்சி முறையில் செயல்படவேண்டும்

* தனியார் பள்ளிகளில் மட்டும்,பள்ளிக்கு வருகை புரிய இயலாத மாணவர்களுக்கு தொடர்ந்து இணையவழி (Online Class) வகுப்புகள்நடத்தப்படவேண்டும்.

*மாணவர்கள்கட்டாயாகமுகக்கவசம் (Mask) அணியவேண்டும்.

*மாணவர்கள்வகுப்பறைக்கு செல்லும் முன் கட்டாயமாக கிருமிநாசினி ( zer)/சோப்புகளைக் கொண்டு கைகளை கத்தம் செய்யவேண்டும்.

* பள்ளிவளாகத்தில் அனைவரும் SOPதவறாதுபின்பற்றவேண்டும்.

* அனைத்து ஆசிரியரல்லா தபணியாளர்கள் கட்டாயமாக கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும்.

* பள்ளிக்கு வருகை புரிவதிலிருந்து விலக்கு பெற்ற,ஆசிரியர்கள்: 01.09.2021 முதல் பள்ளிக்குதவறாது வருகை புரிய வேண்டும்.

* கோவிட்-19 தடுப்பூசி செலுத்தியதற்கான சான்றிதழ் கட்டாயமாக தாங்கள் சார்ந்த பள்ளித் தலைமையாசிரியரிடம் சமர்ப்பிக்கவேண்டும்.

* கோவிட்-19 கொரோனாதொற்றால்பாதிக்கப்பட்டுவர்கள் 90 நாட்கள் கழித்து தடுப்பூசிசெலுத்திக் கொள்ள வேண்டும்.

* கோவிட்-19 தடுப்பூசிசெலுத்திக் கொள்ளாதஆசிரியர்கள், அதற்கானவிலக்குகோரும் சான்றினை திருவள்ளூர் மாவட்டசுகாதாரத் துறைஇணை இயக்குநரிடம் பெற்றுசமர்ப்பிக்கவேண்டும்.

* 100 நாள்வேலைவாய்ப்புத் திட்டப் பணியாளர்களைக் கொண்டு பள்ளி வளாகம் மற்றும்வகுப்பறைகள்கத்தப்படுத்தவேண்டும்.

* EMIS இணையதளத்தில்ஆசிரியர்களின் வருகைப் பதிவுகட்டாயம் பதிவுசெய்யவேண்டும்.

* மருத்துவஉதவிமைய எண் மற்றும் அருகிலுள்ள ஆரம்ப சுகாதார நிலைய அலைபேசி எண் (Help Line) உள்ளிட்ட விவரங்கள் தகவல் பலகையில் மாணவர்கள் / ஆசிரியர்கள் / அலுவலகப் பணியாளர்கள், அனைவரும் தெளிவாக பார்வையிடும் வகையில் இருத்தல் வேண்டும்.

* EMIS விவரங்களை நாள் தோறும் உடனுக்குடன் புதுப்பித்தல் வேண்டும்.

* மாணவர்களுக்குநாள்தோறும் உடல்யெப்பநிலைகண்காணித்து உரிய பதிவேட்டில் பராமரித்தல் வேண்டும்.

* EMIS இணையதளத்தில் தடுப்பூரி செலுத்தியவர்களின் விவரங்கள் தவறாதுபதிவேற்றம் செய்திருத்தல் வேண்டும்.

* சமூகஇடைவெளியைதவறாதுகடைபிக்கவேண்டும்.

*N.C.C, தொடர்பான செயல்பாடுகள் பள்ளி வளாகத்தில் செயல்படுதல் கூடாது.

* மாணவர்களுக்கான சமூக இடையெளியியை கடைபிடித்து வகுப்பறையில் அமரவைக்க வேவண்டும்.

* தேவைப்படின் RBSK தொடர்பு கொண்டுசிறப்பு முகாம் நடத்தி மாணவர்களின் உடல்நிலை / ஆரோக்கியத்தை பரிசோதிக்க வேண்டும்.

* மாணவர்களுக்கு தொற்று ஏற்படாத வண்ணம் முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* மாணவர்கள் தங்கும் விடுதிகளில் சமூக இடைவெளி, SOP நடைமுறைகளை பின்பற்றப்படுவதை உறுதி செய்யப்பட வேண்டும்.

* மாணவர்களுக்கான இலவச பேருந்து பயனண அட்டை பெற்றுவழங்க நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

* சத்து மாத்திரைகள் மாணவர்களுக்கு வழங்கப்படும்.

* 45 நாட்களுக்கு மாணவர்களுக்கான  Bridge Course கற்றல் கற்பித்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும்.

* கொரோனா பாதிப்பு ஏற்பட்ட  நாளிலிருந்து 90 நாட்களுக்குப் பிறகே தடுப்பூசி செலுத்துவதை உறுதி செய்ய வேண்டும்.

* அவ்வபோது பள்ளிகளைஆய்வு செய்ய உயர் அலுவலர்கள்வருகைதரஉள்ளதால், மேற்காணும் அனைத்துதொடர்நடவடிக்கைகளையும் மேற்கொள்ளஅனைத்துவகைப் பள்ளித் தலைமையாசிரியர்கள் / முதல்வர்கள் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *