ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி
A.TAMILSELVAN
சூற்றுச்சூழலை பாதுகாக்கும் பொருட்டு அருப்புக்கோட்டை அருகே ஐசிஐசிஐ பவுன்டேசன் சார்பில் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.
விருதுநகர் மாவட்டம் – ஐசிஐசிஐ பவுண்டேசன் சார்பில் அருப்புக்கோட்டை ஒன்றியத்திற்குட்பட்ட மலைப்பட்டி மற்றும் வெள்ளையாபுரம் ஆகிய ஊராட்சிகளில் உலக சுற்றுச் சூழல் தின விழிப்புணர்வு மற்றும் மரக்கன்று நடும் நிகழ்ச்சி நடைபெற்றது.. இந்நிகழ்வினை தலைமை ஏற்று நடத்திய பஞ்சாயத்து தலைவி .குணசுதா மற்றும் முன்னிலை வகித்து சிறப்புரை ஆற்றிய வனத்துறை அலுவலர்கள் மனோகரன் மற்றும் பாலகுமார்… இந்நிகழ்வில் 500 மரங்கள் நடும்பணி துவங்கப்பட்டது..மக்கள் திரளாக கலந்து கொண்டு சிறப்பித்தனர்..மேலும் ஐசிஐசிஐ பவுண்டேசன் செயல்பாடுகளுக்கு நன்றியும் தெரிவிக்கப்பட்டது