பிஸ்கட்டுக்கு அஞ்சு ரூபா கூல்ட்ரிங்க்ஸ் பாட்டிலுக்கும் அஞ்சு ரூபா கொள்ளையடிக்கும் ஹோட்டல் உரிமையாளர்கள் துதி பாடும் அரசு பேருந்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும்
வட மாவட்டங்களில் இருந்து தினசரி ஆயிரக்கணக்கான வாகனங்கள் தூத்துக்குடி மற்றும் திருச்செந்தூர் உள்ளிட்ட பகுதிகளுக்கு வாகனங்கள் வாகனங்களில் பயணிகள் பயணம் செய்கிறார்கள்.

மேலும் இது தவற அரசு பேருந்துகளில் பயணம் செய்யும் பயணிகளும் அதிகம் இதில் குறிப்பாக இவர்கள் சாலை தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தை என்னும் இடத்தில் ஓரத்தில் நிறுத்தப்படும் உணவு வகைகளில் குறிப்பிட்ட இதில் ஓட்டுநர்களுக்கு இலவசமாக உணவு பொருள் கொடுப்பதால் ஒவ்வொரு பொருளுக்கும் ரூபாய் ஐந்து ரூபாய் அதிகம் வைத்து விற்பனை செய்கிறார்கள். இதை தட்டி கேட்டால் நம்மளை மிரட்டுவது தோணிகளும் மேலும் இந்த பொருட்களை மதுரையிலிருந்து வாங்கி வருகிறோம் எங்களுக்கு கட்டுப்படி ஆகவில்லை எனவும் கூறுகிறார்கள்.

கட்டுபடியாகவில்லை என்றால் ஏன் வியாபாரம் செய்ய வேண்டும் எம்ஆர்பி விலையை விட ஒவ்வொரு பொருளுக்கும் ரூபாய் ஐந்து ரூபாய் கூட என்றால் நாள் ஒன்றுக்கு கிட்டத்தட்ட லட்சக்கணக்கில் இவர்கள் கொள்ளை அடிப்பது உறுதியாகி உள்ளது. இந்த பணம் யார் யாருக்கு எல்லாம் செல்கிறது. இது குறித்து தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது அனைவரும் எதிர்பார்ப்பாக உள்ளது போக்குவரத்து துறை அமைச்சரும் மற்றும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழக நிர்வாகமும் உணவு பாதுகாப்பு துறை நிர்வாகம் உரிய நடவடிக்கை எடுத்து சம்பந்தப்பட்ட கடைகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே சமூக ஆர்வலரின் கோரிக்கையாக உள்ளது உரிய நடவடிக்கை எடுப்பார்களா?




