உலகம் முழுவதும் நேற்று வெளியாகி மாஸ் வெற்றியை பெற்று வருகிறது கமலஹாசனின் விக்ரம் படம். இந்த படத்தில் விஜய் சேதுபதி, பஹத் பாஸில், சூர்யா என ஒரு நட்சத்திர பட்டாளமே வந்து ரசிகர்களை குதூகலப்படுத்தியுள்ளது. வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் இந்த படத்தை அடுத்து லோகேஷ் கனகராஜ்-ன் அடுத்தடுத்த படங்களின் அப்டேட்டுகளும் வெளியாகிய வண்ணம் உள்ளன.
கார்த்தியின் கைதி, விஜய்யின் மாஸ்டர் என அதிரடி திரைப்படங்களை ரசிகர்களுக்கு தந்தார் லோகேஷ் கனகராஜ். தற்போது இயக்கியுள்ள விக்ரம் படம் வெளியாவதற்கு முன்பே அடுத்து இயக்க உள்ள சூப்பர்ஸ்டாரின் படம் குறித்து அப்டேட் வெளியாகிவிட்டது. இதுகுறித்து சமீபத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தை நேரில் சந்தித்து பேசி இருந்த லோகேஷ் கனகராஜின் புகைப்படம் வெளியாகி வைரலாகின. இந்நிலையில் மாஸ்டர் கூட்டணி மீண்டும் இணையவுள்ளது குறித்த அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி விட்டது. தற்போது விஜய் 66 வது படத்தில் பிசியாக உள்ளார்.
இதை தொடர்ந்து விஜய் 67 படத்தின் புதிய அப்டேட்டாக நடிகை சமந்தா கதாநாயகியாக நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சமந்தா ஏற்கனவே விஜய்க்கு ஜோடியாக ‘ தெறி ’, ‘ மெர்சல் ’, ‘கத்தி’ போன்ற ஹிட் படங்களில் நடித்துள்ளார். பொதுவாகவே லோகேஷ் கனகராஜின் முந்தைய படங்களில் கதாநாயகிகள் பெரிதாக பேசப்படவில்லை என்கிற குற்றசாட்டு உள்ளது. எனவே இந்த படத்தில் கதாநாயகிக்கு நல்ல ரோல் இருக்கும் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர். முந்தைய விஜயின் வெற்றி படங்களில் ஜோடியாக நடித்த சமந்தாவிடம் விஜய் 67 கதாநாயகியாக நடிக்க தயாரிப்பாளர்கள் முறையிட்டதாக கூறப்படுகிறது. அவர் கடைசியாக ‘காத்துவாகுல ரெண்டு காதல்’ படத்தில் நடித்தார். இந்த படம் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தது. சமந்தா தற்போது விஜய் தேவரகொண்டாவுடன் ‘குஷி’ படத்தில் நடித்து வருகிறார்.
- விரைவில் திருநெல்வேலிக்கு வந்தேபாரத் ரயில் சேவை தொடக்கம்..!நாட்டின் முக்கிய வழித்தடங்களை இணைக்கும் வந்தேபாரத் ரயில் சேவை விரைவில் திருநெல்வேலிக்கு தொடங்கப்படும் என ரயில்வே […]
- உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு எத்தனையாவது இடம்..?மத்திய அரசு வெளியிட்டுள்ள உணவு தர பட்டியலில் தமிழ்நாட்டுக்கு மூன்றாவது இடம் கிடைத்துள்ளது.மத்திய அரசு உணவு […]
- முகநூலில் பரவும் புது மோசடி..!மக்களின் கைகளில் ஸ்மார்ட்போன் என்பது தவிர்க்க முடியாத நிலையில் உருவாகி இருக்கிறது. அதில் பேஸ்புக், வாட்ஸப் […]
- கேரளாவில் – 8 மாவட்டங்களுக்கு மஞ்சள் எச்சரிக்கைகேரளாவில் அதிக மழை பொழிவுக்கு வாய்ப்பு உள்ள 8 மாவட்டங்களில் பேரிடர் மீட்பு துறையினர் உஷார் […]
- ஜூன் 12 பள்ளிகள் திறப்பு : 1500 சிறப்பு பேருந்துகள் இயக்கம்..!தமிழகத்தில் வருகிற ஜூன் 12ஆம் தேதியன்று பள்ளிகள் திறக்கப்பட உள்ள நிலையில், சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் […]
- நடிகை ரோஜா மருத்துவமனையில் அனுமதி..!ஆந்திரா மாநில அமைச்சரும், பிரபல திரைப்பட நடிகையுமான ரோஜா செல்வமணி, கால் வீக்கம் காரணமாக சென்னை […]
- யூடியூப் சேனல் போல் வாட்ஸ்அப் சேனல்மெட்டா நிறுவனத்திற்கு சொந்தமான வாட்ஸ்அப் உலகம் முழுவதும் ஏராளமான பயனர்களைக் கொண்டுள்ளது. பயனர்களின் வசதிக்கு ஏற்ப […]
- கொலம்பியா விமான விபத்து; 40 நாட்களுக்கு பின் 4 குழந்தைகள் உயிருடன் மீண்ட அதிசயம்கொலம்பியா நாட்டில் கடந்த மே மாதம் 1-ந்தேதி ஒற்றை என்ஜின் கொண்ட சிறிய ரக விமானம் […]
- நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட்டில் சூப்பர் வேலை..!நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷன் லிமிடெட் (NLC India Limited – NLCIL), ஒரு முதன்மையான நவ்ரத்னா […]
- விமானம் – திரைவிமர்சனம்சமுதாயத்தில் உயர்தட்டில் இருக்கும் மக்களுக்கு அன்றாட சலிப்பூட்டும் சில செயல்கள் அடித்தட்டு மக்களின் வாழ்நாள் கனவாக […]
- பெல்- திரைவிமர்சனம்பழந்தமிழர் மருத்துவத்தில் சிறந்து விளங்கிய அகத்தியரின் இரகசிய மருத்துவக்குறிப்புகள் இருக்கின்றன என்கிற சொல்லுக்குத் திரைவடிவம் கொடுத்திருக்கும் […]
- இனி சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்த திட்டம்கோடை விடுமுறைக்குப் பின் பள்ளிகள் தாமதமாக திறக்கப்படுவதால் வரும் கல்வி ஆண்டில் ஒரு பாடத்திற்கு 4 […]
- சோழவந்தான் அருகே ஆண்டி பட்ட சாமி கோவிலில் வருடாபிஷேக விழாமதுரை மாவட்டம்.சோழவந்தான் அருகே காடுபட்டி ஊராட்சிக்கு உட்பட்ட வடகாடுபட்டி கிராமத்தில் உள்ள ஆண்டி, பட்டச்சாமி கோயிலில் […]
- ராஜபாளையம் அருகே நிழல்குடை அமைக்க பூமிபூஜைராஜபாளையம் அருகே சாத்தூர் சட்டமன்ற தொகுதி உட்பட்ட ஆறு கிராமங்களில் 88 லட்ச ரூபாய் மதிப்பிலான […]
- தமிழ்நாட்டில் ஒரு தாஜ்மஹால்திருவாரூர் அருகே அம்மையப்பனில், தாயின் நினைவாக ரூ.5 கோடி செலவில் தாஜ்மஹால் போன்ற வடிவமைப்பில் மகன் […]