கமல் நடித்தவிக்ரம் திடைப்படம் நேற்று உலக முழுவதும் வெளியாகி ரசிகர்களிடையேநல்ல வரவேற்பை பெற்றுள்ளது.இந்தவெற்றி கமல் மற்றும் அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியைஏற்படுத்தியுள்ளது.இந்த திரைப்பட வெற்றியை போலவே அரசியலிலும் வெற்றி பெற வேண்டும் என கமல் தெரிவித்துள்ளார்.
நடிகர் கமல்ஹாசன் மக்கள் நீதி மய்யம் கட்சியை கடந்த 2018-ம் ஆண்டு முதல் நடத்தி வருகிறார்.
கட்சி தொடங்கிய ஓராண்டிலேயே 2019-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலை கமல்ஹாசன் துணிச்சலுடன் எதிர்கொண்டார்.மக்கள் நீதி மய்யம் வேட்பாளர்கள் வெற்றி பெறாவிட்டாலும் குறிப்பிடத்தக்க வகையில் வாக்குகளை பெற்றனர்.
இது கமல்ஹாசனுக்கும், மக்கள் நீதி மய்யம் கட்சியினருக்கும் நம்பிக்கையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து கடந்த சட்டமன்ற தேர்தலிலும் மக்கள் நீதி மய்யம் களம் இறங்கியது. உள்ளாட்சி தேர்தலையும் எதிர்கொண்டது. இந்த 2 தேர்தல்களிலும் அந்த கட்சிக்கு வெற்றி கிடைக்கவில்லை. சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட கமல்ஹாசன், குறைவான வாக்குகள் வித்தியாசத்திலேயே தோல்வியை தழுவினார். மற்ற வேட்பாளர்கள் கணிசமான வாக்குகளை பெற்றனர். இதனால் எதிர்காலத்தில் நிச்சயம் வெற்றியை ருசிக்க முடியும் என்கிற நம்பிக்கையுடன் கட்சி நிர்வாகிகள் பணியாற்றி வருகிறார்கள்.
இந்த நிலையில் கமல்ஹாசன் நடிப்பில் வெளியாகியுள்ள விக்ரம் திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வெற்றி அடைந்துள்ளது. இந்த வெற்றி அரசியல் களத்திலும் எதிரொலிக்க வேண்டும் என்று கட்சி நிர்வாகிகளிடம் கமல்ஹாசன் அறிவுறுத்தி உள்ளார்
இதற்கிடையே கமல்ஹாசன் சென்னை சத்யம் தியேட்டரில் கட்சியின் முன்னணி நிர்வாகிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களுடன் விக்ரம் படத்தை பார்த்து ரசித்தார். அப்போது கட்சியினரும், முக்கிய பிரமுகர்களும் கமல்ஹாசனை பாராட்டினார்கள். அப்போது தொடர்ந்து விக்ரம் போன்று சமூக அக்கறையுடன் கூடிய திரைப்படங்களில் தொடர்ந்து நடிக்க வேண்டும் என்று அவர்கள் கமல்ஹாசனிடம் கேட்டுக் கொண்டனர்.
இதற்கு பதில் அளித்த கமல்ஹாசன், சினிமா, அரசியல் இரண்டுமே எனக்கு முக்கியம். இரண்டிலும் வெற்றிகரமாக பயணிப்போம் என்று கூறியுள்ளார். இது கட்சியினர் மத்தியில் உற்சாகத்தை ஏற்படுத்தி உள்ளது.
- ஆஸ்கர் கமிட்டி உறுப்பினர் பட்டியலில் நடிகர் சூர்யா…கொண்டாட்டத்தில் ரசிகர்கள்சூர்யா நடித்த சூரரைப் போற்று, ஜெய் பீம் ஆகிய படங்கள் கடந்த இரண்டு ஆண்டுகளாக ஆஸ்கர் […]
- தன் நிறுவனங்களை பிள்ளைகளிடம் ஒப்படைக்கும் முகேஷ் அம்பானி…இந்தியாவின் டாப் பணக்காரர்களின் ஒருவராக ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் குழுமத்தின் தலைவராக முகேஷ் அம்பானி பதவி வகித்து […]
- நடிகை மீனாவின் கணவருக்கு அஞ்சலி செலுத்திய ரஜினிகாந்த்நடிகை மீனாவின் கணவர் வித்யாசாகர் நேற்று நுரையீரல் கோளாறு காரணமாக சிகிச்சை பலனின்றி காலமானார். இந்த […]
- வெள்ளை உடையில் கீர்த்திசுரேஷின் அசத்தலான புகைப்படங்கள்..!வெள்ளை உடையில் நடிகை கீர்த்திசுரேஷின் அசத்லான புகைப்படங்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.தென்னிந்தியாவில் புகழ்பெற்ற நடிகையாக இருப்பவர் […]
- திருப்பத்தூரில் புதிய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் திறப்பு..!திருப்பத்தூரில் புதிதாக கட்டப்பட்டுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.திருப்பத்தூர் மாவட்ட ஆட்சியர் […]
- கி.பி 16ம் நூற்றாண்டு சேர்ந்த கலிங்கு கல்வெட்டு கண்டுபிடிப்புமதுரை மாவட்டம் கள்ளிக்குடி வட்டம் வில்லூர் அருகே உவரி பெரிய கண்மாய் கலிங்கில் 500 ஆண்டுகள் […]
- கொரோனா பாதிப்பு இரு மடங்காக உயர்வுதமிழ்நாட்டில் மிகமிக குறைவாக இருந்த கொரோனா பாதிப்பு கடந்த சில வாரங்களாக படிபடியாக அதிகரித்து வருகிறது. […]
- நமது அம்மா ஆசிரியர் ராஜினாமாநமது அம்மா ஆசிரியர் மருது அழகுராஜ் ராஜினாமா செய்துள்ளார். ஒற்றை தலைமை மோதலே இதற்கு காரணம் […]
- ஓபிஎஸ்-க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா தொற்று…அதிமுகவில் ஒற்றைத் தலைமை விவகாரத்தில் ஓபிஎஸ்க்கு ஆதரவாக இருந்த வைத்திலிங்கத்துக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. அதிமுகவில் ஒற்றைத்தலைமை […]
- முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு படமாகிறதுமுன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகவுள்ளது.முன்னாள் பிரதமர் அடல் பிஹாரி வாஜ்பாயின் […]
- மகாராஷ்டிராவில் சிவசேனா ஆட்சி தப்புமா..?மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்ரே தலைமையிலான சிவசேனா அரசு நாளை பெரும்பான்மையை நிரூபிக்க, அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டுள்ளார்.மகாராஷ்டிர […]
- படித்ததில் பிடித்ததுசோறு கண்ட இடம் சொர்க்கம்’ என்கிற சொலவடையை நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். விருந்துக்கு போன இடத்தில் […]
- ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராகும் நடிகர் சூர்யா..!நடிகர் சூர்யாவுக்கு ஆஸ்கர் அகாடமியின் உறுப்பினராக அழைப்பு விடுத்திருப்பது தமிழ் திரையுலகத்திற்கு கிடைத்த பெருமையாகவே அனைவராலும் […]
- டுவீலருக்கும் சேர்த்து சிமெண்ட் சாலை: வைரலாகும் வீடியோ..!வேலூர் மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் போடப்பட்டுள்ள சிமெண்ட் சாலை வேலூர் மக்களை ஆச்சர்யத்தில் […]
- கஞ்சா விற்பனை -ரூ.5.50 கோடி மதிப்புள்ள சொத்துக்கள் முடக்கம்கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இருவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து […]