பெற்றோரை இழந்த பள்ளி மாணவர்களுக்கு 75,000 ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என பள்ளிக்கல்வித் துறை தெரிவித்துள்ளது. மேலும் மாணவரின் கல்வி பராமரிப்பு செலவுகளுக்கு மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளி மூலம் விண்ணப்பிக்கலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
2005ஆம் ஆண்டு முதல் தமிழ்நாட்டின் பள்ளிக்கல்வி இயக்ககத்தின் கீழ் இயங்கும் அரசு, அரசு நிதி உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் வருவாய் ஈட்டும் தாய் அல்லது தந்தை இருவரில் எவரேனும் விபத்தில் இறந்துவிட்டாலோ அல்லது நிரந்தர முடக்கம் அடைந்தாலோ பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு மாநில அரசு சார்பில் 50 ஆயிரம் ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. பின்னர் இந்த உதவித்தொகை 2014ஆம் ஆண்டு 75 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்பட்டது. இந்த உதவித் தொகையின் மூலம் 1 முதல் 12 வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் பயன்பெறலாம். இவ்வாறு வழங்கப்படும் நிதி உதவித்தொகை சம்பந்தப்பட்ட மாணவர்களின் வங்கி சேமிப்பு கணக்கில் செலுத்தப்படும். அதேபோல இந்த உதவித் தொகையின் அசல் மற்றும் வங்கியின் மூலம் பெறப்படும் வட்டித் தொகை மாணவரிகளின் கணக்கிலேயே வரவு வைக்கப்படும். இவர்களின் உயர்கல்வி மற்றும் பராமரிப்பு தேவைகளின் போது இந்த தொகையைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த உதவித் தொகையைப் பெற மாணவர்கள் சம்பந்தப்பட்ட பள்ளிகளில் விண்ணப்பிக்கலாம் என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இறந்த பெற்றோரின் இறப்பு சான்றிதழ், உடற்கூறு சான்று, சாதி சான்றிதழ், ஆதார் அட்டை, குடும்ப அட்டை நகல், புகைப்படம் போன்றவற்றோடு இதற்கான விண்ணப்பப் படிவத்தையும் பூர்த்தி செய்து சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியரிடம் ஒப்புதல் பெற்று பள்ளிக்கல்வித் துறைக்கு அனுப்பி வைக்க வேண்டும்.
- ராமநாதபுரத்தில் உலக நுகர்வோர் தின விழா..!
- பழனி முருகன் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா ஆரம்பம்..!திண்டுக்கல் மாவட்டம், பழனி அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.அறுபடை […]
- கோவில்பட்டியில் ஆட்டோக்களுடன் போராட்டம் நடத்திய ஆட்டோ ஓட்டுநர்கள்..!தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் இயக்கப்படும் மினிபேருந்துகள் விதிகளை மீறி செயல்படுவதாகக் கூறி ஆட்டோ ஓட்டுநர்கள் தங்களது […]
- சோழவந்தான் அருகே புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம்சோழவந்தான் அருகே காடுபட்டியில் புரட்சிகர சோசியலிஸ்ட் கட்சி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே காடுபட்டியில் […]
- ஓபிஎஸ் வழக்கு: உயர்நீதிமன்றம் நாளை விசாரிக்கும் என அறிவிப்புஓபிஎஸ் செய்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை இன்று நடைபெறுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில் நாளை நடைபெறும் […]
- உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல் தார்ச்சாலை.., விபத்து ஏற்படும் அபாயம்..!காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரில் மின்கம்பத்தை அகற்றாமல், நெடுஞ்சாலைத்துறையினர் சாலை அமைத்துள்ளதால், விபத்து அபாயம் ஏற்படுவதாக அப்பகுதி […]
- தேர்வு முறைகேடுகள்-டிஎன்பிஎஸ்சி ஆலோசனை தொடங்கியதுகுரூப் 4, நில அளவர் தேர்வுகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி தலைவர் […]
- நாகர்கோவிலில் மாணிக்கக் கற்கள் எனக் கூறி.., பெண்களை ஏமாற்றிய பூசாரிகள் மீது வழக்கு..!நாகர்கோவிலில் மாணிக்கக்கற்கள் எனக் கூறி பெண்களை ஏமாற்றிய இரண்டு பூசாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு, […]
- இலக்கியம்:நற்றிணைப் பாடல் 148: வண்ணம் நோக்கியும் மென் மொழி கூறியும்நீ அவண் வருதல் ஆற்றாய் எனத் […]
- சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம்சோழவந்தான் ஜெனகை நாராயண பெருமாள் கோவிலில் சீதா ராமர் திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது.ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.மதுரை […]
- பணம் எடுத்து தருவதாக கூறி மோசடி செய்து தங்க நகைகள் வாங்கிய திருடன்மதுரை வாடிப்பட்டியில் ஏடிஎம் கார்டில் பணம் எடுத்து தருவதாக கூறி பெண்ணிடம டூப்ளிகேட் ஏடிஎம் கார்டை […]
- படித்ததில் பிடித்ததுசிந்தனைத்துளிகள் மனநிறைவு… மனநிறைவு… நாம் வாழ்வில் முன்னேறாமல் இருப்பதற்கு பல நேரங்களில் மற்றவர்களையே குறை கூறிக் […]
- அதானி விவகாரம்- 12வது நாளாக முடங்கிய நாடாளுமன்றம்அதானி விவகாரத்தை விவாதிக்க ஒன்றிய அரசு மறுப்பு தெரிவித்து வரும் நிலையில் தொடர்ந்து 12 வது […]
- பொது அறிவு வினா விடைகள்
- கர்நாடகாவில் தேர்தல் தேதியை அறிவித்தது தேர்தல் ஆணையம்கர்நாடக அரசின் பதவிக்காலம் மே மாதம் நிறைவடையும் நிலையில் தேர்தல் நடைபெறும் தேதியை தேர்தல்ஆணையம் அதிகாரப்பூர்வமாக […]