• Fri. Apr 26th, 2024

ராக் வித் ராஜா! – ரசிகர்களுக்கு இளையராஜா அழைப்பு!

இசைஞானி இளையராஜா மேடையில் தோன்றும் இசைநிகழ்ச்சி மார்ச் மாதம் சென்னையில் நடைபெற இருக்கிறது.

மெர்குரி மற்றும் நாய்ஸ் & ப்ரைன்ஸ் நிறுவனம் இணைந்து நடத்தும் இந்நிகழ்ச்சிக்கு ராக் வித் ராஜா என்று பெயரிடப்பட்டுள்ளது! சென்னையில் நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சி குறித்த அறிவிப்பை தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார் இளையராஜா.

2019 ம் ஆண்டு சென்னை ஒய்.எம்.சி.ஏ. மைதானத்தில் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் சார்பாக இளையராஜாவுக்கு நடைபெற்ற பாராட்டு விழாவிற்குப் பிறகு தற்போது மீண்டும் இசைஞானியின் இசை நிகழ்ச்சி நடைபெற இருப்பது அவரது ரசிகர்களிடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *