தமிழ்நாடு திரைப்பட இயக்குனர்கள் சங்க தேர்தல் பிப்ரவரி 27 அன்று நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் ஆர்கே செல்வமணி தலைமையில் புதுவசந்தம் என்ற ஓர் அணியும், கே பாக்யராஜ் தலைமையில் இமயம் என்ற ஓர் அணியும் போட்டியிடுகிறது.
சென்னையில் நேற்று இமயம் அணியின் வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் நடைபெற்றது. இதில், கே.பாக்யராஜ் பேசுகையில் செல்வமணியை குறிப்பிட்டு, நீ எடுத்த படங்கள் ஓடியதாக சொல்கிறார்கள். ஆனால் அந்த படங்களை நீதான் எடுத்தாய் என்று எனக்கு சந்தேகமாக உள்ளது. மேலும் கொரோனா காலத்தில் உதவி செய்ததாக அவர் பொய் கூறிவருகிறார். இயக்குநர் மணிரத்னம், பூமிகா அறக்கட்டளை தான் உதவியது என்றும் கூறிய பாக்யராஜ், பல்வேறு குற்றச்சாட்டுகளையும் முன்வைத்தார்.
இதற்கு ஆர் கே செல்வமணியின் அணி சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டுள்ளது. அந்த அணியை சேர்ந்தவர்கள் சார்பில் எழுதப்பட்டிருக்கும் திறந்த மடல் ஒன்றில் பாக்யராஜை கடுமையாக விமர்சித்துள்ளனர். முக்கியமாக பாக்யராஜ் அளித்திருக்கும் வாக்குறுதிகளை பொய்யாக தரப்பட்ட வாக்குறுதிகள் என கடுமையாக சாடியுள்ளனர். 60 வயதுக்கு மேற்பட்ட இயக்குநர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வு ஊதியம் தருவதாக கே பாக்யராஜ் வாக்குறுதி அளித்திருந்தார். “நான்கு வருடங்களுக்கு மேலாக எழுத்தாளர் சங்கத்தில் இருக்கிற நீங்கள் இதுவரை ஒரே ஒரு ஜீவனுக்கு கூட பென்ஷன் வழங்கவில்லை. அப்படி இருக்கையில் எப்படி எங்கள் சங்கத்தில் உள்ளவர்களுக்கு நீங்கள் பென்ஷன் தருவீர்கள்” என்று கேட்டுள்ளனர்.
இயக்குநர் சங்கத்தில் 60 வயதை கடந்தவர்கள் சுமார் 400 பேர்கள் உள்ளனர். இவர்களுக்கு மாதம் 2000 ரூபாய் ஓய்வூதியம் வழங்க வேண்டும் என்றால் மாதத்திற்கு 8 லட்ச ரூபாய் தேவைப்படும். அப்படியானால் வருடத்திற்கு கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய். வருடம் ஒரு கோடி ரூபாய் வருவது என்றால் வங்கியில் டெபாசிட் தொகை 16 கோடி ரூபாய் வைத்திருக்க வேண்டும். அவ்வளவு பணம் இயக்குனர் சங்கத்தில் எங்கு உள்ளது என்று. பாக்யராஜ் பொய்யான வாக்குறுதி தந்து ஏமாற்றுகிறார்.
அதுபோல் நான்கு வருடமாக எழுத்தாளர் சங்கத்தில் இருந்தும் ஒரு பைசா கூட நீங்கள் நிதி திரட்டியது இல்லை. பிறகு எப்படி 16 கோடி ரூபாய் திரட்ட போகிறீர்கள். முத்தாய்ப்பாக, சினிமாவில் மட்டும் தான் கதை வெல்லும்.. திரைக்கதை வெல்லும்.. ஆனால் சங்கத்தில் உண்மை மட்டுமே வெல்லும். பதவிக்காக பொய் சொல்லி இருக்கிற மரியாதையை கெடுத்துக் கொள்ளாதீர்கள் என அந்த கடிதத்தில் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
- இனி ரேஷன் கடைகளிலும் ‘மீண்டும் மஞ்சள் பை’…தமிழக முதல்வர் ஸ்டாலின் கடந்த சில நாட்களுக்கு முன் பிளாஸ்டிக் பயன்பாட்டை தடுக்கக்கூடிய வகையில் ‘மீண்டும் […]
- ஒராண்டில் திமுக எந்த சாதனையும் செய்யவில்லை- பிரேமலதா விஜயகாந்த் பேட்டிகோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொள்ள வருகை தந்த பிரேமலாத விஜயகாந்த் திமுக அரசு கடந்த ஒராண்டில் […]
- சார்ஜிங் பூத்… ஆப் மூலம் பணம் செலுத்தி சார்ஜிங் செய்துக்கொள்ளலாம்…கேரளா மாநிலம், கோட்டயம் அடுத்த உழவூர் ஊராட்சியில் மின்சார வாகனங்களை சார்ஜ் செய்ய மின்கம்பத்தில் சார்ஜிங் […]
- மரம் அறுக்கும் ரம்பத்தால் மனைவி,பிள்ளைகளை கொலை செய்த ஐடி ஊஉழியர் தற்கொலைசென்னையில் பயங்கரம் மரம் அறுக்கும் ரம்பம் வாங்கி மனைவி, பிள்ளைகளின் கழுத்தை அறுத்து கொலை செய்த […]
- ஏழுமலையானை தரிசிக்க 15 மணிநேரம் காத்திருக்கும் பக்தர்கள்..திருப்பதியில் அலைமோதும் பக்தர்கள் கூட்டம் தரிசனத்துக்காக 15 மணி நேரம் காத்திருப்புஉலகப்புகழ் பெற்ற எழுமலையான் கோயிலில் […]
- கழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கல் -4 பேர் கைதுகழுகுமலையில் ரேசன் அரிசி பதுக்கி விற்பனை செய்த மில் உரிமையாளர் உள்பட 4 பேர் கைது. […]
- தமிழக காங்கிரசுக்கு அடுத்த தலைவர் விஜயதாரணியா -ஜோதிமணியா?தமிழக காங்கிரசில் மாநில தலைவர் பதிவிக்கு அடுத்து பெண் ஒருவருக்கு வாய்ப்பு கொடுக்கபடலாம் என்று பேசப்படுகிறது. […]
- முதல்வரின் குரல் பாஜகவுக்கு பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது..மதுரையில் நடைபெற்ற பெரியாரிய உணர்வாளர்கள் கூட்டமைப்பு நிகழ்ச்சி நடைபெற்றது. இந்நிகழ்ச்சியின் போது திராவிடர் விடுதலைக் கழகம் […]
- சிரித்த முகத்துடன் பிறந்த அதிசய குழந்தை…. வைரலாகும் புகைப்படங்கள்…ஆஸ்திரேலியாவில் ஒரு குழந்தை எப்போதும் சிரித்துக்கொண்டிருப்பது போன்ற முக அமைப்புடன் பிறந்திருக்கிறது.உலக நாடுகளில் ஒவ்வொரு நாளும் […]
- சாண்ட்விச் தான் உணவே… 23 ஆண்டுகளாக சாண்ட்விச் சாப்பிட்ட இளம்பெண்..இங்கிலாந்தில் கடந்த 23 ஆண்டுகளாக இளம்பெண் ஒருவர் சாண்ட்விச் மட்டுமே சாப்பிட்டு உயிர்வாழ்ந்து வரும் சம்பவம் […]
- இதை செய்யாவிட்டால் ரேஷனில் பொருள் வாங்க முடியாது.ஜூன் 30-ம் தேதிக்குள் ரேஷன் கார்டுடன் ஆதார் கார்டை இணைக்காவிட்டால் ரேஷன் பயன்களைப் பெற முடியாது […]
- திமுக ஆலோசனைக் கூட்டம்… முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றம்…சென்னை அறிவாலயத்தில் இன்று முதல்வர் ஸ்டாலின் தலைமையில் திமுகவின் மாவட்ட செயலாளர் கூட்டம் நடைபெற்றது. இந்த […]
- 79,000 மாணவ,மாணவிகளுக்கு பணி நியமன ஆணைகள்முதலமைச்சர்உத்தரவின் கீழ் தமிழகம் முழுவதும் அரசு தொழிற் பயிற்சி நிலையங்களில் நடைபெற்று வரும் தனியார் துறையின் […]
- சொதி:தேவையானவை: பாசிப்பருப்பு – 200 கிராம், உருளைக்கிழங்கு, சின்ன வெங்காயம் – தலா 200 கிராம், […]
- புத்துணர்வு தரும் ஏற்காடு கோடை விழா…கடந்த இரண்டு ஆண்டுகளாக நடத்தப்படாமல் இருந்த ஏற்காடு கோடைவிழா மே 25 தொடங்கி ஜூன் 1 […]