கன்னியாகுமரி மாவட்டம் இரையுமன்துறையில் கடல் சீற்றத்தில் இருந்து மக்களை பாதுகாக்கவும், வீடுகளில் கடல் தண்ணீர் புகாமல் இருக்க 250 மீட்டர் தூண்டில் வளைவு அமைக்க கிராம மக்கள் கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் விஜய்வசந்த் இடம் கோரிக்கை வைத்தனர்.
இன்று இரையுமன்துறைக்கு சென்ற விஜய்வசந்த் அந்த பகுதிகளை பார்வையிட்டார். மேலும் அங்குள்ள ஆற்றின் கரையில் சுவர் அமைத்து தேங்காய்பட்டணம் துறைமுகத்திற்கு இணைப்பு சாலை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை மனு அளித்தனர்.
இந்த நிகழ்ச்சியில் மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் தாரகை கத்பட், வர்த்தக காங்கிரஸ் மாவட்ட தலைவர் ஆமோஸ், மாவட்ட துணை தலைவர் மகேஷ்லாசர், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்தினகுமார், இளைஞர் காங்கிரஸ் மேற்கு மாவட்ட தலைவர் திபாகர், மேற்கு மாவட்ட ஓ. பி. சி பிரிவு மாவட்ட தலைவர் ஸ்டுவர்ட், வட்டார தலைவர் கிறிஸ்டோபர், மரியதாசன், பங்கு தந்தை ரெஜீஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
- காஞ்சிபுரம் அருகே அரசு ஊழியர்கள் சாலை மறியல்
- வாக்குச் சாவடி ஊழியர்கள் உயிரை பணயம் வைத்து பள்ளத்தாக்கு வழியாக செல்லும் காட்சி
- இது தேவையா?
- இளநீர் புதிய அவதாரம் !
- மிஸ்டர் ஓ.பி.எஸ்…இது ஒரு சாதாரண தேர்தல் அல்ல
- விருதுநகர்: நாளை பேருந்தில் இலவச பயணம்
- அடிப்படை வசதிகளே இல்லை. ஓட்டு பெட்டிகளை அனுமதிக்க மாட்டோம், தேர்தலை புறக்கணிக்கும் மலைக் கிராமங்கள்
- விருதுநகர்: பதற்றமான வாக்குசாவடிகளில் போலீஸ் குவிப்பு
- அண்ணாமலை தான் வெற்றி பெற வேண்டும்-கைவிரலை துண்டித்த பா.ஜ.க பிரமுகர்!!
- கலெக்டர் ஆஷாஅஜித் தலைமையில் வாக்காளர் விழிப்புணர்வு நிகழ்ச்சி