தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு செய்தார்.

பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இனி நடக்காது என்ற கீதாஜீவன் இதற்காக சமூக நலத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவித்தார்.
- இந்திய பாரம்பரியத்தைப் போற்றும் ‘டேல்ஸ் ஆஃப் இந்தியா’ ஆடைகள் தொகுப்பு அறிமுகம்..,
- திருப்பரங்குன்றம் முருகன் கோவிலில் உண்டியல் காணிக்கை 93 இலட்சம் வருமானம்..,
- பீதியில் மக்கள் ; கோவையில் நள்ளிரவில் புகுந்து சிறுத்தை அட்டகாசம்..,
- சுப்ரமணிய சுவாமி திருக்கோயில் ஆனி ஊஞ்சல் திருவிழா..,
- திருப்பரங்குன்றம் திருநகரில் பாலம் கட்டுமானப் பணி நிறுத்தம்..,
- தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் வட்டக்கிளை பேரவை கூட்டம்..,
- கண்ணைக் கட்டிக்கொண்டு 26 யோகாசனங்கள் செய்து உலக சாதனை படைத்த சென்னை மாணவர்கள்!
- திண்டுக்கல் அருகே குட்கா பதுக்கி வைத்திருந்த 2பேர் கைது..,
- அவனியாபுரம் அருகே இளைஞர் வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் -காவலர்களை கண்டித்து முற்றுகை..,
- பல்வேறு அரசியல் விவகாரங்கள் குறித்து விளக்கம் அளித்த அமைச்சர் செங்கோட்டையன்..,




