தமிழகத்தில் கடந்த ஆட்சியின் போது திருமண நிதி உதவி திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் நடக்காது என சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதாஜீவன் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
சேலம் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் அமைந்துள்ள அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் சமூக நலன் மற்றும் பெண் உரிமைகள் துறை அமைச்சர் கீதா ஜீவன் இன்று ஆய்வு செய்தார்.
பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், அரசினர் கூர்நோக்கு இல்லத்தில் உள்ள பெண்கள் மீதான வழக்குகளை விரைந்து முடிக்க அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார். மேலும் தமிழகம் முழுவதும் மக்கள் பிரதிநிதிகள் மூலம் குழந்தை திருமணங்களை தடுக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும்; குறிப்பாக குழந்தை திருமணங்கள் அதிகம் நடைபெறும் தர்மபுரி, கிருஷ்ணகிரி, தேனி, கரூர், ஈரோடு ஆகிய 5 மாவட்டங்களில் கூடுதல் கவனம் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.
மேலும் கடந்த ஆட்சியில் திருமண நிதியுதவித் திட்டத்தில் நடந்த முறைகேடுகள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் இனி நடக்காது என்ற கீதாஜீவன் இதற்காக சமூக நலத்துறை மூலம் உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாக தொரிவித்தார்.
- காரியாபட்டியில் சக்தி மாரியம்மன் கோயில் பொங்கல் விழா
- நடிகர் அருண் விஜய் நாயகனாக நடிக்கும் “ரெட்டை தலை”
- கோவை மருதமலையின் கரிவரதராஜ பெருமாள் கோவிலில் நகைகள் திருட்டு- அர்ச்சகர் கைது…
- அலங்காநல்லூரில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் திறப்பு விழா
- மதுரையில் இளைஞரை வெட்டிப் படுகொலை
- பண்ணைக்குடி கிராமத்தில் அழகர் மலையானுக்கு அன்னதானம்
- நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர் சந்திப்பு
- மக்கள் தாகம் தணிக்கும் புனித பணி செய்யும் இயக்கம் அ.தி.மு.க., ஆர்.பி.உதயகுமார் பேச்சு
- உலக புத்தக தினம்
- பூப்பல்லாக்குடன் அழகுமலைக்கு புறப்பட்ட கள்ளழகர்