நடிகை நிரோஷா தனது காதல் கணவர் ராம்கி இதுவரை தன்னிடம் “லவ் யூ” என சொன்னதே இல்லை என்று கூறியுள்ளார்.
தென்னிந்திய திரைப்பட நடிகைகளில் ஒருவர் நிரோஷா. அக்னி நட்சத்திரம் என்ற திரைப்படம் மூலம் தமிழ் திரையுலகில் அறிமுகமானார். இவர் 1995ம் ஆண்டு நடிகர் ராம்கி திருமணம் செய்து கொண்டார். நடிகை நிரோஷா தனக்கும் தனது கணவருக்கும் இடையிலான தொடக்க கால காதல் கதை பற்றி தற்போது பகிர்ந்துள்ளார்.
தொடக்கத்திலிருந்தே எனக்கும் அவருக்கும் இடையில் மோதல் போக்கு மட்டுமே இருந்ததாகவும், எப்போதும் சண்டையிட்டுக் கொண்டே இருப்போம் என்று கூறினார். மேலும் படத்தில் நடிக்கும் போது, அவர் என்னைத் தொடும் போது அனுமதி கேட்க மாட்டீங்களா? கமல் சார் கூட நடித்திருக்கிறேன். அவர் கூட தொடுவதற்கு முன் அனுமதி கேட்பார். நீங்க யாருங்க? என நடிகர் ராம்கியிடம் கேட்டு உள்ளேன். அப்போது எல்லாம் எனக்கு அவரை சுத்தமாக பிடிக்காது. அதனை தொடர்ந்து நாங்கள் நல்ல ஒரு நண்பர்களாக மாறினோம். தொடர்ந்து இருவரும் காதலிக்க தொடங்கியது பற்றி பேசிய நிரோஷா, நான் இதுவரை ராம்கியிடம் “லவ் யூ” என்று சொன்னதே இல்லை. அவரும் என்னிடம் சொன்னதுமில்லை, ஆனால் ஏன் என தெரியவில்லை என்று கூறினார்.
மேலும் தனது காதலுக்கு குடும்பத்தினர் அனைவரும் எதிர்ப்பு தெரிவித்ததாகவும், சினிமா துறையை சேர்ந்தவர்களை காதலிக்கக் கூடாது என்பதில் உறுதியாகவும் கண்டிப்பாக இருந்ததாகவும் கூறினார். இதனை அடுத்து நான் நடிக்க விரும்பவில்லை. அப்போது மணிரத்னம் சார் திரைப்படத்தில் நடிக்க ஒரு வாய்ப்பு வந்த நிலையில், என் அக்கா ராதிகா என்னை படத்தில் நடிக்க அனுமதித்தார். ஆனால் படப்பிடிப்புக்கு செல்லும்போது என் அண்ணனோ அல்லது அம்மாவோ என்னுடன் வருவார்கள்.
அதனால் என்னால் ராம்கியிடம் பேச முடியாது. மேலும் நான் ராம்கியிடம் போனில் பேசி, வீட்டில் நிறைய அடி வாங்கி இருக்கிறேன். இதனையடுத்து என் அக்கா ராதிகா, நாங்கள் இருவரும் ஒன்றாக நடிக்கக்கூடாது என்று உத்தரவு போட்டார். ஆனால், அப்போது சினிமாவில் வெற்றி படங்களை தொடர்ந்து கொடுத்த ஜோடியாக நாங்கள் இருவரும் அறியப்பட்டு இருந்தோம். மேலும் இணைந்த கைகள் என்ற படத்தில் ராம்கிக்கு நான் தான் ஜோடியாக நடிக்க வேண்டிய நிலையில், படத்தின் பூஜை முடிந்தவுடன் என் அக்கா ராதிகா இந்த படத்தில் நடிக்க கூடாது என்று தடை விதித்தார். அதனைத் தொடர்ந்து அருண் பாண்டியனுக்கு, என்னை ஜோடியாக மாற்றினார்கள் என்று நிரோஷா கூறியுள்ளார்.
- மதுரையில் மாநில அரசை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்மாநில அரசை கண்டித்து பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மத்திய மாநில அரசு மற்றும் பொதுத்துறை சங்கங்களின் […]
- நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும்…தமிழகத்தில் நவம்பர் 1 ஆம் தேதி மீண்டும் உள்ளாட்சி தினமாக கொண்டாடப்படும் என அறிவித்த தமிழக […]
- பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி – சீமான் பெருமிதம்நாம் தமிழர் கட்சி மேற்கொண்ட தொடர் முயற்சியின் விளைவாக இனி பள்ளி மாற்றுச்சான்றிதழில் தாய்மொழி குறித்த […]
- மதுரை ஆவினில் முறைகேடு- 30 பேரிடம் விசாரணைஆவினில் நடந்த முறைகேடுகள் குறித்து 30 பேரிடம் நேரில் அழைத்து விசாரணை செய்யப்பட்டுள்ளது.மதுரை ஆவினில் கடந்த […]
- உலக முழுவதும் வேகமாக பரவி வரும் குரங்கு அம்மைஉலகம் முழுவதும் 215 பேர் குரங்கம்மை வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக உலக சுகாதாரஅமைப்பு தகவல் தெரிவித்துள்ளது.கொரோனா தொற்று […]
- புதிய கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் அடிக்கல் நாட்டினார்.சிங்கார சென்னை 2.0 திட்டத்தின் கீழ் அமைக்கப்படவுள்ள கால்பந்து மைதானத்திற்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.சென்னை […]
- முகம் வெள்ளையாக:பால் பவுடர் மற்றும் எலுமிச்சை சாறுபால் பவுடரில் எலுமிச்சை சாறு மற்றும் தேன் சேர்த்து பேஸ்ட் […]
- மகிந்த ராஜபக்சேவிடம் 5 மணி நேரம் விசாரணை-கைதாக வாய்ப்பு?இலங்கையில் போராட்டம் நடத்திய மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது குறித்து முன்னாள் பிரதமர் ராஜபக்சேவிடம்5 மணி […]
- காலிஃப்ளவர் மசாலா:தேவையானவை :காலிஃப்ளவர் – 1, வெங்காயம் – 1, தக்காளி – 2, இஞ்சி-பூண்டு விழுது […]
- பெட்ரோல் இல்லை, பணம் இல்லை – பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் டுவிட்பாகிஸ்தானில் அந்நிய செலவாணி கையிருப்பு குறைவு உள்ளிட்ட காரணங்களால் பொருளாதார நெருக்கடி தொடங்கியுள்ளது.இலங்கையை தொடர்ந்து பாகிஸ்தானிலும் […]
- சிந்தனைத் துளிகள்• எல்லாத் துயரங்களையும் ஆற்றிவிடும் சக்தி காலத்திற்கு இருக்கிறது. • தன் குற்றம் மறப்பதும் பிறர் […]
- பொது அறிவு வினா விடைகள்1.பவுண்ட் நாணய முறை எந்த நாட்டில் பின்பற்றப்படுகிறது?இங்கிலாந்து2.டாலர் நாணய முறை எந்தெந்த நாடுகளில் பின்பற்றப்படுகிறது?அமெரிக்கா, மலேசியா3.யுவான் […]
- குறள் 214:ஒத்த தறவோன் உயிர்வாழ்வான் மற்றையான்செத்தாருள் வைக்கப் படும்.பொருள் (மு.வ):ஒப்புரவை அறிந்து போற்றிப் பிறர்க்கு உதவியாக வாழ்கின்றவன் […]
- இந்திய மக்களைப் பிரிக்கும் வேலையை ஒவைசி செய்கிறார்- பாஜக தலைவர்ஏஐஎம்ஐஎம் கட்சித் தலைவர் அசாதுதீன் ஒவைசி நாட்டை இந்திய மக்களை பிரித்து அழிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளார். […]
- மனுஷனா இருந்ததுபோதும்… நாயாக மாறிய ஜப்பான் மனிதர்..ஜப்பானில் மனிதனாய் வாழ்வதை வெறுத்த நபர் ஒருவர் ஏகமாக செலவு செய்து நாய் உடை அணிந்து […]