விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே கிராமத்து இளைஞர்கள் அனைவரும் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் உள்ள குலதெய்வம் கோவிலுக்கு சென்று விடியவிடிய வழிபாடு நடத்தும் திருவிழா நடைபெற்றது.
மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இத்திருவிழாவில் பத்தாயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றுள்ளனர்.
விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே முகவூர் கிராமம் உள்ளது. இக்கிராமத்தில் தெற்கு தெரு இந்து நாடார் உறவின்முறை சார்பில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பங்கள் உள்ளன.
குடும்பங்களில் உள்ள ஆண்கள் மட்டும் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள அருள்மிகு வனப்பேச்சி அம்மன் கோவில் சென்று வழிபாடு நடத்துவது வழக்கமாக இருந்து வருகிறது.
அந்த கிராமத்தைச் சேர்ந்த அனைத்து ஆண்கள் கிராமத்தை விட்டு வெளியேறி வனப்பகுதிக்குள் சென்று கோவிலில் விடியவிடிய வழிபாடு நடத்துவது வழக்கம். இந்த ஆண்டும் அனைத்து இளைஞர்களும் இரு சக்கர வாகனங்கள் மற்றும் இதர வாகனங்களில் சுமார் பத்து கிலோமீட்டர் தொலைவில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரம் அருள்மிகு வனப்பேச்சி அம்மன் கோவில் சென்றடைந்தனர்.
அங்கு 30 மூடை அரிசியை சமையலும், டன் கணக்கில் காய்கறிகளும் கொண்டு சைவ சாப்பாடு வழங்கப்படும். பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட கிராம ஆண்கள் கோவிலில் குவிந்துள்ளனர்.
அதேசமயம் முகவூரில் அனைத்து வழித்தடங்களும் அடைக்கப்படும். பெண் காவலர்கள் பாதுகாப்புடன் கிராமத்து பெண்கள் விடிய விடிய விழித்திருந்து பாரம்பரிய விளையாட்டு மற்றும் இதர கலாச்சார நிகழ்வுகள் நடத்தி மகிழ்வது வழக்கம்.
ஆண்கள் யாரும் கிராமத்தில் இல்லாத நேரத்தில் பெண்கள் செல்போன் எதுவும் உபயோகிக்க கூடாது எனவும், ஊரைவிட்டு எக்காரணம் கொண்டும் வெளியேறக் கூடாது எனவும் கட்டுப்பாடு விதிக்கப்பட்டு இத்திருவிழா சிறப்பாக நடந்து வருகிறது.
கிராமத்தில் உள்ள அனைத்து ஜாதியினரும் இத்திருவிழாவில் பங்கேற்று வழிபட்டு வருகின்றனர். விடிந்த பின்னர் காலை 11 மணி அளவில் இங்கு உள்ள பிரசாதத்தை கிராமத்திற்கு கொண்டு சென்று எல்லையில் உள்ள பெண்களிடம் காண்பித்தால் மட்டுமே காலை 11 மணிக்கு மேல் கிராமத்திற்குள் ஆண்கள் அனுமதிக்கப்படுவார்கள். 300 ஆண்டுகளுக்கு மேல் இத்திருவிழா நடைபெற்று வருவது குறிப்பிடத்தக்கது.
- நாளை பாரத் பந்த்..??? வெளியான அறவிப்பு…ஓபிசி சமூகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கு மத்திய அரசை வலியுறுத்தி நாளை நாடு முழுவதும் போராட்டம் […]
- அப்பாவை சிகிச்சைக்காக வெளிநாடு அழைத்து செல்கிறோம்… நடிகர் சிம்பு ட்வீட்மருத்துவ சிகிச்சைக்காக தந்தை டி. ராஜேந்தரை வெளிநாடு அழைத்துச் செல்வதாக நடிகர் சிம்பு அறிக்கை வெளியிட்டுள்ளார்.. […]
- கஞ்சா வியாபாரியின் சொத்துக்கள் முடக்கம்தேனி மாவட்டத்தில் கஞ்சாவிற்றவரின் சொத்துக்கள் மற்றும் வாகனங்களை முடக்க உத்தரவுதேனி மாவட்டம் கடமலைக்குண்டு வட்டம் மயிலாடும்பாறைச் […]
- மாநிலங்களவை எம்.பி. வேட்பாளர் தேர்தல்-அதிமுகவில் இழுபறிமாநிலங்களவை எம்.பி வேட்பாளர் தேர்தலில் வேட்பாளர்களை தேர்வு செய்வதில்அதிமுகவில் தொடர்ந்து இழுபறி நீடித்திவருகிறது.பாராளுமன்ற மேல்சபைக்கு தமிழகத்தில் […]
- மேயர்… வந்தார், நின்றார், சென்றார்… புஷ்ஷாகி
போன மக்கள் குறைதீர் கூட்டம். மனு அளிக்க வந்தவர்கள் ஏமாற்றம்.மதுரை மாநகராட்சியில் நடைபெற்ற குறைதீர்சிறப்பு முகாமிற்கு வந்த மேயர் இடையிலேயே சென்றுவிட்டதால் பொதுமக்கள் ஏமாற்றமடைந்தனர்.மதுரை மாநகராட்சி […] - பக்தர்கள் மீது தாக்குதல்-கோயில்அர்ச்சகர் அராஜகம்இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள மதுரை தல்லாகுளம் அருள்மிகு ஐய்யப்பன் கோவில்( அர்ச்சகர் மாரிசாமியின் […]
- மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம்மதுரை மேயர் தலைமையில் குறைதீர் சிறப்பு முகாம் ஏராளமான பொதுமக்கள் மனுக்களுடன் குவிந்த பொதுமக்கள்மதுரை மாநகராட்சி […]
- ஆபாச போஸ்டர்- மக்கள் நீதிமய்ய கட்சியினர் மீது வழக்குமதுரையில் ஆபாச வார்த்தைகள் இடம்பெற்ற போஸ்டரால் மக்கள் நீதி மய்ய கட்சியினர் மீது இரண்டு காவல்நிலையங்களில் […]
- ஒரு லிட்டர் பெட்ரோல் வெறும் 1 ரூபாய் தான்…வெனிசுலா நாட்டில் ஒரு லிட்டர் பெட்ரோல் ஒரு ரூபாய்க்கு விற்பனை செய்வது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் […]
- உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் இந்தியாவுக்கு புகழாரம்…சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் உலக பொருளாதார கூட்டமைப்பு மாநாடு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் நேற்று ஒரு […]
- பிரதமர் மோடி நாளை மறுநாள் சென்னை வருகைநாளை மறுநாள் சென்னைக்கு வருகை தரும் பிரதமர் மோடிக்கு 5 அடுக்கு பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் […]
- கோவில் விழாவில் ஆடல், பாடலில் ஆபாசம் கூடாது… உயர்நீதிமன்ற மதுரை கிளைகோவில் விழாவில் இடம்பெறும் ஆடல், பாடல் நிகழ்ச்சிகளில் ஆபாசம் கூடாது என்று உயர் நீதிமன்ற மதுரை […]
- இலங்கையில் அதிர்ச்சி தரும் பெட்ரோல் விலை உயர்வுஇலங்கையில் அதிர்ச்சியளிக்கும் வகையில் ஒரு லிட்டர் பெட்ரோல் விலை வரலாறு காணாத உயர்ந்துள்ளது.இலங்கையில் டாலரும் இல்லை,ரூபாயும் […]
- பலாக்கொட்டை பொடிமாஸ்தேவையானவை:பலாக்கொட்டை – 200 கிராம், இஞ்சி – ஒரு சிறிய துண்டு, பச்சை மிளகாய் – […]
- 2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானலில் கோடை விழா2 ஆண்டுகளுக்கு பிறகு கொடைக்கானல் கோடை விழாவின் முக்கிய நிகழ்வான மலர்கண்காட்சியை அமைச்சர் ஐ. பெரியசாமி […]