சிவகாசி அருகே ரிசர்வ் லைன் அரசு மேல்நிலைப்பள்ளியில் சுமார் 6 அடி நிலம் கொண்ட பாம்பு ஒன்று ஊர்ந்தபடி பள்ளி வகுப்பறைக்குள் சென்ற வீடியோ காட்சிகள் வெளியாகி பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாம்பு இதுவரை பிடிப்படாத நிலையில் பள்ளி வகுப்பறைக்குள் புகுந்து தஞ்சமடைந்துள்ளதாக பெற்றோர் அச்சம் தெரிவித்துள்ளனர்.

எனவே பள்ளி நிர்வாகம் பள்ளி வளாகம் முழுவதும் சுத்தம் செய்து பராமரிப்பு செய்த பின்னர் மாணவர்களை உள்ளே அனுமதிக்க வேண்டும் என்ற கோரிக்கையை முன் வைத்துள்ளனர்.




