• Wed. Apr 24th, 2024

தனது தாயிடம் ராகுல் காட்டிய பாசம் – நெகிழ்ச்சி படம்

ByA.Tamilselvan

Oct 6, 2022

நடைபயணத்தில் பங்கேற்ற தனது தாயிடம் ராகுல்காந்தி காட்டிய பாசம் பலரையும் நெகிழ்ச்சியடைச்செய்துள்ளது.
கன்னியாகுமரியில் தொடங்கிய தற்போது கர்நாடகாவில் தொடரும் ராகுல்காந்தியின் நடைபயணத்தில் சோனியா காந்தி பங்கேற்றுள்ளார் 2 நாட்கள் ஓய்வுக்கு பின்னர் ராகுல்காந்தி இன்று (வியாழக்கிழமை) தனது பாதயாத்திரையை மீண்டும் தொடங்கினார். மண்டியா மாவட்டம் பாண்டவபுராவில் இருந்து பாதயாத்திரை தொடங்குகிறது.இதில் சோனியா காந்தியும் பங்கேற்கிறார்.பயணத்தின் போது சோனியாவின் ஷூ லெஸ் கழன்றதால்,ராகுல் சற்றும் யோசிக்காமல் உடனே கீழே குனிந்து அதை கட்டிவிட்டார். இதை கண்டு அங்கிருந்த பலரும் நெகிழ்ந்து போய்விட்டனர். சிறுதுதூரம் சென்ற பின் சோனியாவின் உடல் நிலையை கருத்தில் கொண்டு அவரை காரில் ஏறிச்செல்லும்படி அனுப்பி வைத்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *