நாம் பார்ப்பது உண்மையான புடின் அல்ல என்றும் தற்போது புடினாக இருப்பவர் டூப் என்றும் உக்ரைன் உளவுத்துறை தகவல் வெளியிட்டுள்ளது.
ரஷ்யா – உக்ரைன் நாட்டின் மீது கடந்த 6 மாதங்களாக தாக்குதல் நடத்தி வருகிறது. இந்நிலையில் பொது நிகழ்வில் நாம்பார்ப்பது ரஷ்ய அதிபர் விளாடிமீர் புடின் அல்ல என உக்ரைன் உளவுத்துறை பரபரப்பு தகவலை வெளியிட்டுள்ளது.உடல் ,மனநலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டுள்ள புடின் பாடிடபுளைப்(டூப்) பயன்படுத்துகிறார் என்கிறார் உக்ரைன் உளவுத்துறை தலைவர் கைரிலோபுடனோவ். பழைய ,புதிய புகைப்படங்களை ஒப்பிட்டால் இது உங்களுக்கே தெரியும் என்கிறார் அவர். இவை அனைத்தையும் வதந்திகள் என்று மறுக்கிறது ரஷ்ய அரசு.