மாமியார் உடைத்தால் மண் குடம், மருமகள் உடைத்தால் பொன் குடம்
பொருள்: ஒரே தவறை மாமியார் செய்யும் போது அது பெரிதாகக் கருதப்படுவதில்லை. ஆனால் வீட்டுக்கு வந்த மருமகள் அதே தவறைச் செய்துவிட்டால் அதை மாமியார் பெரிதுபடுத்தி விடுகிறார் என்று பொருள் வருகிறது.
உண்மையான பழமொழி:
மாமியார் உழைத்தால் மண்ணுக்கு உரம், மருமகளும் உழைத்தால் பொன்னுக்கு உரம்.
வ
பொருள்: விவசாயி வீட்டில் மாமியாரும் மருமகளும் சேர்ந்து உழைத்தால் பொன்னும் பொருளும் சேரும் என்பது அர்த்தம்.
ஐந்து பெற்றால் அரசனும் ஆண்டி ஆவான்
பொருள்: ஐந்து பெண்களை பெற்றெடுத்தால், அவர்களுக்கு திருமணம் செய்து, சீர் போன்றவற்றை செய்து முடிப்பதற்குள் அரசனும் ஆண்டி ஆகிவிடுவான்.
உண்மையான பொருள்: கீழ்க்கண்ட ஐந்தும் கிடைத்தால் அரசனும் ஆண்டி ஆவான்.
- ஆடம்பரமாய் வாழும் தாய்
- பொறுப்பு இல்லாமல் போகும் தகப்பன் 3. ஒழுக்கம் தவறும் மனைவி
- துரோகம் செய்யும் உடன்பிறப்பு
5.பிடிவாதம் பிடிக்கும் பிள்ளை
இந்த ஐந்தும் கொண்ட எந்த குடும்பமும் முன்னுக்கு வராது என்பதே பொருள்.
ரசனை நம்பி புருசனைக் கைவிட்டது போல
பொருள்: அரசனை மேல் (ஆசை) நம்பிக்கொண்டு தன் கணவனை கைவிட்டது போல.
உண்மையான பழமொழி: அரசினை என்பது அரச மரத்தைக் குறிக்கும், திருமணமான பெண்கள் பிள்ளை பேறு பெற அரசமரத்தை சுற்றுவது, கட்டிய கணவனை கவனிக்காமல் வெறும் அரசமரத்தை சுற்றுவது பயன் தராது.