மத்திய அரசு பணிகளில் 10 லட்சம் பேருக்கு வேலை வழங்கும் “ரோஜ்கர் மேளா” என்ற திட்டத்தை பிரதமர் மோடி இன்று காணொளி மூலம் தொடங்கி வைத்தார். அதன்படி இன்று 75,000 பேருக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டது. வரும் மாதங்களில் மீதமுள்ள பணியிடங்களை நிரப்புவதற்கு மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் ,ரெயில்வே துறை தேர்வாணையம் மூலம் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.