தனிப்பட்ட நபர்களின் இருசக்கர மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஏ.டி.ஜி.பி. சுற்றறிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அனைத்து காவல்துறை உயரதிகாரிகாரிகளுக்கும் சட்டம்- ஒழுங்கு டிஜிபி அருண் வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில்..,
“போலீஸ் ஸ்டிக்கரை தனிப்பட்ட இருசக்கர வாகனம், கார்களில் பயன்படுத்தாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். போலீஸ் துறைக்கு சம்பந்தம் இல்லாதவர்கள் தங்கள் வாகனங்களில் போலீஸ் ஸ்டிக்கர் ஒட்டினால் நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.